1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஆண்டு இறுதித்தேர்வு அட்டவணை வெளியீடு!
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி வரை பொதுதேர்வு நடைபெறவுள்ளது. மேலும், இந்த மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையும் தற்போது வெளியாகியுள்ளது.
பொதுத்தேர்வு அட்டவணை:
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா தொற்றின் காரணமாக இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன. தற்போது இந்தியா முழுவதுமே கொரோனாவினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்த காரணத்தினால் மீண்டும் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளுமே கொரோனா பரவலின் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை.
பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – மதிய உணவுத்திட்டத்தில் முட்டை வழங்க அரசு முடிவு!
இந்தாண்டு கண்டிப்பாக பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகி மாணவர்கள் தேர்விற்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 29 ஆம் தேதி நடைபெறும் எனவும், அதற்கான அட்டவணையும் தற்போது வெளியாகியுள்ளது.
1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்வு காலை 9.30 மணி முதல் மதியம் 11.30 மணி வரையும், 4 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரையும் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 25 ஆம் தேதி தமிழ் தேர்வும், 26 ஆம் தேதி ஆங்கில தேர்வும் நடைபெறும். 27 ஆம் தேதி 3 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணித தேர்வும், 28 ஆம் தேதி 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் தேர்வும், 29 ஆம் தேதி 1, 2 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கணித தேர்வும், 3 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சுற்றுசூழல் அறிவியல் தேர்வும், 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சமூக அறிவியல் தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.