மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு? விரைவில் வெளியாக உள்ள அறிவிப்பு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு? விரைவில் வெளியாக உள்ள அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு? விரைவில் வெளியாக உள்ள அறிவிப்பு!மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு? விரைவில் வெளியாக உள்ள அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு? விரைவில் வெளியாக உள்ள அறிவிப்பு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் மீண்டும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. இதையடுத்து தற்போது மீண்டும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் மீண்டும் அகவிலைப்படி உயர்ந்தால் எவ்வளவு உயரும் என்று பார்ப்போம்.

அகவிலைப்படி உயர்வு

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதனால் அரசு ஏராளமான செலவினத்தை எதிர்கொண்டால் நிதி நெருக்கடி நிலை ஏற்பட்டது. அதனால் கடந்த 2020ம் ஆண்டு முதல் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு, அகவிலை நிவாரணத் தொகையை வழங்கப்படவில்லை. இதையடுத்து கொரோனா பரவல் குறைந்த பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 3% வழங்கப்பட்டு 31% பெற்று வந்தனர். இதனை தொடர்ந்து கடந்த ஜனவரி 1ம் தேதி அன்றும் அகவிலைப்படி மீண்டும் உயர்த்தப்பட்டு தற்போது 34% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

இந்த அகவிலைப்படி உயர்வு நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை பொறுத்து கணக்கிடப்படுகிறது. இது அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீடு அளவு என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதத்தில் ஏஐசிபிஐ குறியீடு புள்ளிகளில் ஏற்றம் கண்டது. ஆனால் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் இந்த குறியீடு குறைய தொடங்கியது. இந்த நிலையில் மீண்டும் ஏப்ரல் மாதத்தில் இக்குறியீடு 127.7 ஆக உயர்ந்தது. இதே போல் இக்குறியீடு மே மற்றும் ஜூன் மாதத்தில் 127ஐ தாண்டினால் அகவிலைப்படி 5% வரை உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு – கொரோனா பரவல் எதிரொலி!

மேலும் ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டில் அடுத்த அகவிலைப்படி விரைவில் வழங்கப்பட உள்ளது. இதையடுத்து அகவிலைப்படி 5% உயர்த்தப்பட்டால் மத்திய அரசு ஊழியர்கள் 39% அகவிலைப்படியை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 27 ஆயிரத்தை தாண்டும் என்று கூறப்படுகிறது. அதனால் அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு எப்போது வழங்கப்படும் என்று எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!