தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு – கொரோனா பரவல் எதிரொலி!
இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் வேகமெடுத்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 8,084 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் நோய் தடுப்பு நடவடிக்கையாக மீண்டும் கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்:
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா தொற்றால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த கொரோனா வைரஸ் தொற்று மேலும் உருமாற்றம் அடைந்து டெல்டா பிளஸ் வைரஸ் வேகமெடுக்க தொடங்கியது. மத்திய சுகாதாரத்துறை வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசுக்கு அறிவுரைகளை வழங்கியது. இதன் அடிப்படையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த கொரோனா வைரஸ் அடுத்தடுத்து பல நிலைகளில் உருமாற்றம் அடைந்து பாதிப்பு எண்ணிக்கையை அதிகரித்தது.
TN Job “FB Group” Join Now
இடையில் பாதிப்புகள் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8,084 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 32 லட்சத்து 30 ஆயிரத்து 101 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பை தொடர்ந்து நேற்று மட்டும் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிக்சை பலனின்றி உயிரிழந்தனர். அதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 5,24,771 ஆக உயர்ந்துள்ளது
அரசு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – புதிய விடுமுறை திட்டம் அமல்!
அதனை தொடர்ந்து தற்போது 47,995 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது அதிகரித்து வரும் பாதிப்புகள் கொரோனா நான்காம் அலையாக இருக்க கூடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் தடுப்பு பணியாக மீண்டும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தற்போது மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் பிரதமர் விரைவில் ஆலோசனை செய்ய உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.