ஆகஸ்ட் 7 வரை அனைத்து பள்ளிகளும் மூடல்? கொரோனா பரவல் எதிரொலி!

0
ஆகஸ்ட் 7 வரை அனைத்து பள்ளிகளும் மூடல்? கொரோனா பரவல் எதிரொலி!
ஆகஸ்ட் 7 வரை அனைத்து பள்ளிகளும் மூடல்? கொரோனா பரவல் எதிரொலி!
ஆகஸ்ட் 7 வரை அனைத்து பள்ளிகளும் மூடல்? கொரோனா பரவல் எதிரொலி!

மாநிலத்தில் கோவிட்-19 அதிகரித்து வருவதால் பொது நலன் கருதி அனைத்து அரசுப் பள்ளிகளையும் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை மூட மாநில ஆளுநர் லா. கணேசன் உத்தரவிட்டுள்ளார். மேலும் மாநிலத்தில் பன்னிரண்டு வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் விகிதத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பள்ளிகள் மூடல்:

கொரோனா பாதிப்புகள் அதிகரித்து மற்றும் மணிப்பூரில் தொற்று விகிதம் 15 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்ந்து வரும் சூழலில், அனைத்து பள்ளிகளும் 24-ந் தேதி வரை தொடர்ந்து மூடப்படுகிறது என அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த அறிவிப்பின் அடிப்படையில் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு மற்றும் தனியார் என அனைத்து பள்ளிகளும் நேற்று வரை மூடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மாநிலத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான அனைத்து அரசுப் பள்ளிகளையும் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை மூட மணிப்பூர் ஆளுநர் லா.கணேசன் உத்தரவிட்டுள்ளார்.

Exams Daily Mobile App Download

இருப்பினும், 8 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கான நேரடி வகுப்புகள் இன்று முதல் தொடங்கி உள்ளது. மேலும் மாநிலத்தில் நிலவும் கொரோனா நிலைமை காரணமாக 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் விகிதத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ததாக கூறப்பட்டுள்ளது. “பன்னிரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் இன்னும் தடுப்பூசி போடப்படாததால், அவர்கள் தொடர்ந்து COVID-19 ஆல் பாதிக்கப்படுகின்றனர்” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த மாத இறுதியில் TNPSC குரூப் 2 &2A முடிவுகள்? வெளியான தகவல் இதோ!

மேலும் 8 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கான நேரடி வகுப்புகள் இன்று முதல் தொடங்கி உள்ளதால் கொரோனா தொடர்பான சரியான நடவடிக்கை மற்றும் அரசின் நிலையான கட்டுப்பாடுகளையும், அரசாங்கத்தால் அவ்வப்போது வெளியிடப்படும் வழிகாட்டுதல்கள் கண்டிப்பாக கடைபிடிக்கப்படும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வெள்ளிக்கிழமை நிலவரப்படி, மணிப்பூரில் 79 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் வைரஸ் தொடர்பான இறப்பு எதுவும் பதிவாகவில்லை. மேலும் மொத்த இறப்பு எண்ணிக்கை 2,124 ஆகும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!