SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – கார்டு பரிவர்த்தனைகளை பாதுகாப்பது எப்படி? முழு விவரம் இதோ!
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியின் வாடிக்கையாளர்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு பரிவர்த்தனையை மேற்கொள்ளும் போது அதனை எப்படி பாதுகாப்பாக வைத்திருப்பது என்பதற்கான குறிப்புகளை வங்கி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
பரிவர்த்தனை பாதுகாப்பு
நாட்டின் முன்னணி வங்கித்துறை நிறுவனமான எஸ்பிஐ, சமீபத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான பரிவர்த்தனைகளை உறுதி செய்வதற்காக விரிவான டிஜிட்டல் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, வங்கி சேவைகளில் நிதிப் பாதுகாப்பு நம்பமுடியாத அளவிற்கு முக்கியமானதாகிவிட்டதால், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் போது எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் சில முக்கிய பாதுகாப்புக் குறிப்புகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது.
TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் – இதுவரை 18 லட்சம் பேர் பதிவு!
அந்த வகையில், மோசடி அச்சுறுத்தல்களால் பாதிக்கப்படக்கூடிய கார்டு சேவைகளை பாதுகாப்பாக வழங்க உறுதி பூண்டுள்ள SBI வங்கி நிர்வாகம் அதற்கான சில முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அதாவது, டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போது எப்போதும் கவனமாக இருப்பது மோசடி ஆபத்தை குறைக்கும் என்று SBI வங்கி நிர்வாகம் தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறது.
டெபிட்/கிரெடிட் கார்டு பாதுகாப்பு:
- ஏடிஎம் அல்லது பிஓஎஸ் பரிவர்த்தனைகளைச் செய்யும்போது சுற்றுப்புறங்களில் கவனமாக இருங்கள்
- பின்னை உள்ளிடும் போது கீபேடை மூடி வைக்கவும்
- பரிவர்த்தனைகளைச் செய்வதற்கு முன் எப்போதும் ஈ-காமர்ஸ் இணையதளங்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்கவும்
Exams Daily Mobile App Download
- ஆன்லைன் வங்கி மூலம் உங்கள் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளை நிர்வகிக்கவும்
- உள்நாட்டு மற்றும் சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு ஈ-காமர்ஸ் தளங்கள், பிஓஎஸ் மற்றும் ஏடிஎம் ஆகியவற்றில் கார்டு பரிவர்த்தனைகளுக்கு வரம்பை அமைக்கவும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும் To Join => Whatsapp கிளிக் செய்யவும் To Join => Facebook கிளக் செய்யவும் To Join => Telegram Channel கிளிக் செய்யவும்