மயங்கிய ஆல்யா மானசா, சஞ்சீவ் ஜோடியின் மகன் அர்ஷ்? வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் கதாநாயகியாக நடித்து தற்போது விலகி இருக்கும் நடிகை ஆலியா மானசா தன்னுடைய மகனை அக்கறையுடன் கவனித்து வரும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகை ஆலியா மானசா:
தமிழ் சின்னத்திரை சீரியல்களை பல குடும்பங்கள் விரும்பி பார்க்கின்றனர். அதனால் சீரியல் மட்டுமல்லாமல் அதில் நடிக்கும் நடிகர் நடிகைகள் கூட ரசிகர்களுக்கு விருப்பமாக இருக்கின்றனர். இந்நிலையில் ராஜா ராணி 2 சீரியல் விஜய் டிவியில் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் குடும்ப சீரியல் ஆகும். இந்த சீரியலில் சரவணன் கதாபாத்திரத்தில் நடிகர் சித்து நடித்து வருகிறார். சந்தியாவாக நடிகை ஆலியா மானசா நடித்து வந்தார். ஐஏஎஸ் கனவுடன் இருக்கும் பெண் ஒருவர் திருமணம் முடிந்து தனது புகுந்த வீட்டில் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றியே கதை இருக்கிறது.
கோபியின் கோபத்தால் பாக்கியா எடுத்த விபரீத முடிவு – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த திருப்பம்!
இந்நிலையில் சந்தியாவாக நடிக்கும் ஆலியாவிற்கு நடிகர் சஞ்சீவ் உடன் திருமணம் முடிந்து ஏற்கனவே ஐலா என்ற ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் ஆலியா இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்தார். அதனால் அவர் சீரியலில் இருந்து விலகினார். சில நாட்களுக்கு முன் ஆலியாவிற்கு மகன் பிறந்தார். தன்னுடைய மகனிற்கு அர்ஷ் என பெயர் வைத்துள்ள நிலையில், ஆலியா தற்போது நடிப்பில் இருந்து இடைவெளி எடுத்து தனது குழந்தையை பார்த்து வருகிறார்.
ExamsDaily Mobile App Download
அர்ஷ் முகத்தை காட்டாமல் இப்போது வரை அவர்கள் வீடியோ பதிவிட்டு இருக்கின்றனர். ஒரு நடிகையாக இருந்தாலும் தனது மகனிற்கு எல்லாம் பார்த்து பார்த்து செய்யும் அம்மாவாக ஆலியா இருந்து வருகிறார். இரண்டாவது முறை தாயானாலும் அவர் தன்னுடைய குழந்தையை ரசித்து ரசித்து பார்த்துக் கொள்வதை வீடியோவாக பதிவிட்டு இருக்கிறார். காலையில் எழுந்து தனது மகனை வெளியில் காட்டிய போது அவர் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் வெய்யில் சூட்டில் அர்ஷ் மயங்கி தூங்கி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.