கோபியின் கோபத்தால் பாக்கியா எடுத்த விபரீத முடிவு – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த திருப்பம்!

0
கோபியின் கோபத்தால் பாக்கியா எடுத்த விபரீத முடிவு - 'பாக்கியலட்சுமி' சீரியலில் அடுத்த திருப்பம்!
கோபியின் கோபத்தால் பாக்கியா எடுத்த விபரீத முடிவு - 'பாக்கியலட்சுமி' சீரியலில் அடுத்த திருப்பம்!
கோபியின் கோபத்தால் பாக்கியா எடுத்த விபரீத முடிவு – ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த திருப்பம்!

விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் இன்று கோபி, பாக்கியாவிடம் காட்டிய கோபத்தால் அவர் எடுத்த முடிவு விபரீதமாக முடிந்த சம்பவங்களை சுவாரஸ்யம் குறையாமல் இங்கு பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியல் முந்தய எபிசோடில் நிரபராதியென விடுதலையாகிய பாக்கியா வீட்டிற்கு வரவும் இரண்டு மகன்களையும் கட்டி தழுவியதை தொடர்ந்து இன்று பாக்கியாவின் சமையல் பிஸ்னஸ் அவர் சிறையில் இருந்து வெளியில் வந்த பின் சாப்பாட்டை யாரும் வாங்காததால் குழப்பத்தில் யோசித்து கொண்டிருந்தார். அப்போது எழில் வந்து பிஸ்னஸ் குறித்து பாக்யவிடம் கேட்க, அதற்க்கு அவர் அவனிடம் போச்சு என சலிப்பாக சொல்கிறார். அந்த சமயம் செல்வி அக்கா வந்து யாருமே கொண்டு போன மசாலாவை வாங்கவில்லை என்று சொல்கிறார்.

CBSE 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – எழுத்துத் தேர்வுகளுக்கு முன்னதாக Webinar பயிற்சி!

அதை கேட்டும் பாக்கியா மேலும் சோர்வாகி என்ன செய்வதுனு தெரியல என்று சொல்லி அழுகிறார். நம்ம மேல தப்புன்னு செய்தி போட்டவங்க ஏன் நம்ம மேல தப்பு இல்லன்னு திரும்பவும் செய்தி போடல? என கூறுகிறாள். அவளிடம் சரி விடும்மா பார்த்துக்கலாம் என ஆறுதல் கூறுகிறான் எழில். ஈஸ்வரியும் எல்லாமே சரியாகிடும் என சொல்கிறாள். அதன்பின்னர் அனைவரும் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது, செல்வி அக்கா நான் ஆபிஸ் போகவா? என்று கேட்கிறாள். அதை கேட்டு கோபி கோபத்தில் நான் அவ்ளோ சொல்லியும் என் பேச மீறி உன்னோட இஷ்டத்துக்கு எல்லாமே பன்னிட்டு இருக்க. இனிமேல் என்கிட்டே நீ பேசவே கூடாது என்று சொல்லி சாப்பாட்டு பாதியிலே எழுந்து மாடிக்கு செல்கிறான்.

ExamsDaily Mobile App Download

இனியாவும் அம்மாவை பார்த்து, அதான் அப்பா வேணான்னு சொல்லுறாங்கள அப்புறமும் ஏன் இப்படி பண்றீங்க? என கேட்க, செழியனும் இவங்க நம்ம சொல்றத கேக்கவேமாட்டாங்க அவங்களுக்கு நம்மள பத்தி எல்லாம் அக்கறை இல்லை , அவங்கள பத்தி மட்டும் தான் யோசிப்பாங்க என்று சொல்லி அவனும் அந்த இடத்தை விட்டு நகர்கிறான். மறுநாள் பாக்யா, கோபியிடம் காபி கொண்டு போய் கொடுக்க, என்கிட்ட பேசாதன்னு சொன்னேன்ல என கோபமாக கத்திவிட்டு எழுந்து சென்றுவிடுகிறான். இதனால் வேறு வழியில்லாமல் பாக்யா தன்னுடைய பிசினஸை நிறுத்த முடிவு செய்து சமைக்கும் இடத்தில் இருந்து பொருட்களை எடுத்துக்கொண்டு கண்ணீரோடு வீட்டிற்கு கிளம்புகிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!