12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் நிறுவனத்தில் வேலை – மாத ஊதியம்: ரூ.1,28,000/-
ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனமானது விமான பராமரிப்பு பொறியாளர் பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் விமான பராமரிப்பு பொறியாளர் பணிக்கென மொத்தம் 78 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவடைவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Air India Engineering Services Ltd (AIESL) |
பணியின் பெயர் | விமான பராமரிப்பு பொறியாளர் |
பணியிடங்கள் | 78 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 18.07.2022, 19.07.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Interview |
AIESL காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி விமான பராமரிப்பு பொறியாளர் பணிக்கென மொத்தம் 78 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் கல்வி தகுதி:
Aircraft Maintenance Engineer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
AIESL வயது வரம்பு:
விமான பராமரிப்பு பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.95,000 முதல் ரூ.1,28,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
AIESL தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் 18.07.2022 மற்றும் 19.02.2022ம் தேதி நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். நேர்காணலில் தேர்வு செய்யப்படுபவர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.