குழந்தை பிறந்து மீண்டும் சீரியலில் களமிறங்கிய ஆலியா – விஜய் டிவியில் புதிய நெடுந்தொடர்!
விஜய் தொலைக்காட்சியில் தற்போது புதிதாக விஸ்வாசம் என்னும் புதிய தொடர் அறிமுகமாகவுள்ளது. அந்த தொடரில் ராஜா ராணி சீசன் 2 தொடரில் நடித்து கொண்டிருந்த ஆலியா குழந்தை பிறந்த பிறகு மீண்டும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஸ்வாசம் சீரியல்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. பெரும்பாலும் விஜய் தொலைக்காட்சி சீரியல்கள் ஒவ்வொருவரின் குடும்பத்திலும் நடைபெறும் நிகழ்வுகளை அப்படியே படம் போட்டுக் காட்டுவதால் ரசிகர்கள் பலரும் விரும்பி பார்த்து வருகின்றனர். தற்போது விஜய் தொலைக்காட்சியில் விஸ்வாசம் என்கிற ஒரு சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீரியலில் பாரதி கண்ணம்மா தொடரில் பாரதியாக நடித்து வரும் பாரதி தான் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் இனியா வெளியிட்ட இன்ஸ்டா பதிவு – ரசிகர்கள் அதிர்ச்சி!
மேலும், ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செம்பருத்தி சீரியலில் கதாநாயனாக நடித்த கார்த்திக்கும் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். பாரதிக்கு ஜோடியாக சின்னத்தம்பி சீரியலின் மூலமாக பிரபலமான பாவனி நடிக்கவுள்ளார். பாவனி தற்போது தான் பிக் பாஸ் சீசன் 5 ல் கலந்துகொண்டார். பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு பட வாய்ப்பு இல்லாத காரணத்தினால் மீண்டும் சீரியலில் இணையவுள்ளார். மேலும், கார்த்திக்கு ஜோடியாக ராஜா ராணி சீசன் 2 தொடரில் நடித்து கொண்டிருந்த ஆலியா நடிக்கவுள்ளார்.
முல்லையின் சிகிச்சைக்காக மீனாவின் அப்பாவிடமிருந்து திருடிய ஜீவா – அதிர்ச்சியில் குடும்பத்தினர்கள்!
ஆலியா கர்ப்பமாக இருந்த நிலையில் பிரசவத்திற்காக ராஜா ராணி தொடரில் தொடரில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக ரியா என்கிற புதுமுக நடிகை ராஜா ராணி தொடரில் சந்தியாவாக நடிக்க ஒப்பந்தமானார். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் ராஜா ராணி தொடரில் இணைந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராஜா ராணி தொடரில் மீண்டும் இணையும்படியான ஐடியா இல்லை என கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். ஆனால், தற்போது புதிதாக அறிமுகமாகவுள்ள விஸ்வாசம் என்கிற தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.