விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் இனியா வெளியிட்ட இன்ஸ்டா பதிவு – ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கியாவின் கடைசி மகளாக இனியா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நேஹா மேனன். அவருக்கு பீரியட்ஸ் வலி தாங்க முடியவில்லை என இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். மேலும் ரசிகர்களிடம் அவர் அதற்கு உதவி கேட்டு இருக்கிறார்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் பல திருப்பங்கள் வருகிறது. குடும்பக் கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் டாப் வரிசையில் இருக்கிறது. இந்த சீரியலில் பல முக்கிய கதாபாத்திரங்கள் கதையுடன் ஒன்றி நடித்து வருகின்றனர். இந்நிலையில் பாக்கியாவின் கடைசி மகளாக இனியா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நேகா மேனன். அவர் இந்த சீரியலில் பள்ளி மாணவியாக நடித்து வருகிறார். கோபி இந்த குடும்பத்தில் அனைவரையும் ஏமாற்றி இருந்தாலும் தன்னுடைய மகள் மீது தான் அதிக பாசம் வைத்திருக்கிறார்.
மீண்டும் கண்ணம்மாவாக அறிமுகமாகும் ரோஷினி – குஷியில் ரசிகர்கள்! ப்ரோமோ ரிலீஸ்!
இந்நிலையில் நேஹா மேனன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். பரிச்சயமான அவர் பாக்கியலட்சுமி சீரியல் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை பெற்றிருக்கிறார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் தன்னுடைய தங்கை பற்றி புகைப்படங்களையும் பாக்கியலட்சுமி சீரியலில் எடுத்த வீடியோக்களையும் பதிவிடுவார். அந்த வகையில் நேற்று அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட வீடியோ பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
விஜய் டிவி “ஸ்டார்ட் மியூசிக்” நிகழ்ச்சியில் வெற்றியை தட்டி சென்ற சீரியல் இதுவா? ரசிகர்கள் உற்சாகம்!
அதில் தனக்கு பீரியட்ஸ் வலி அதிகமாக இருப்பதாகவும் தன்னால் தாங்க முடியவில்லை என பதிவிட்டுள்ளார். அதோடு அவர் படப்பிடிப்பில் இருப்பதாக தெரிவித்தார். மேலும் தனக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என அதில் அவர் தெரிவித்தார். அவருடைய அந்த பதிவு மிகவும் வருத்தப்பட செய்கிறது. மேலும் நேஹா மேனனை பல ரசிகர்கள் பாலோ செய்து வரும் நிலையில் அவருடைய இந்த பதிவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.