பாத்ரூமில் வழுக்கி விழுந்த முல்லை – தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!
குழந்தை பெற்றுக்கொள்ள முல்லை செயற்கை முறையில் சிகிச்சை எடுத்துக் கொள்வாரா என ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த வேளையில் தற்போது முல்லை வீட்டில் வழுக்கி விழும் படியான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் அனைத்துமே மக்களின் மனதில் நல்ல ஒரு இடத்தைப் பிடித்து வருகிறது. அந்த வகையில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. முல்லைக்கு குழந்தை பிறக்குமா பிறக்காதா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். முல்லையால் இயற்கையாக கருவுற முடியாது, செயற்கை முறையில் வேண்டுமானால் சிகிச்சை எடுத்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என மருத்துவர் கூறுகிறார்.
TN Job “FB Group” Join Now
செயற்கை முறையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள நிறைய செலவாகும் என்பதால் முல்லைக்காக தற்போதைக்கு வீடு கட்டும் பிளானை நிறுத்தி வைக்கலாம் என மூர்த்தி கூறி விடுகிறார். ஆனால் மீனாவிற்கு இந்த பிளான் சுத்தமாக பிடிக்கவில்லை. அனைவருக்கும் சொந்தமான இந்த வீட்டை மட்டும் எப்படி விட்டுக் கொடுக்க முடியும் எனக்கூறி சண்டை போடுகிறார். எப்படியும் இவர்கள் செயற்கை முறையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என நினைத்து முல்லை புலம்புகிறார்.
இந்தியாவில் பென்ஷன் பெறுபவர்கள் கவனத்திற்கு – மத்திய அரசு வைத்த செக்!
பின்பு ஒருவர் குழந்தை வரம் வேண்டி பரிகாரம் செய்தால் குழந்தை பிறக்க வாய்ப்பிருக்கிறது எனக் கூறியதால் கோவிலுக்கு பரிகாரம் செய்யலாம் என நினைக்கிறார். ஆனால் குடும்பத்தில் உள்ள யாரும் இந்த பரிகாரம் செய்ய ஒப்புக்கொள்ளவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் முல்லை விழித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் திடீரென வீட்டில் வழுக்கி விழுந்து தலையில் பலத்த அடிபட்டு விடுகிறது. இதனால் ரத்த வெள்ளத்தில் முல்லையை குடும்பத்தினர்கள் மருத்துவமனையில் சேர்க்கும்படியான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.