இந்தியாவில் பென்ஷன் பெறுபவர்கள் கவனத்திற்கு – மத்திய அரசு வைத்த செக்!
இந்தியாவில் உள்ள பென்சனர் பெறுபவர்களின் கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசு. இதனால் கடும் அதிர்ச்சியில் உள்ள ஓய்வூதியர்கள். பென்சன் விதிகளை திருத்துவதற்கான நிலைக்குழுவின் 32 வது கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பென்ஷன்:
இந்தியாவில் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு அவர்கள் வேலை செய்யும் நிறுவனங்கள் சார்பில் பிஎப் கணக்கு தொடங்கப்பட்டு மாத சம்பளத்தில் இருந்து ஒரு தொகை பிடித்து வருகிறது. இந்த தொகை அவர்கள் பெறும் ஊதியத்தை பொறுத்தது. இந்த தொகை பணி காலம் நிறைவடைந்த பின் மொத்தமாக அவர்களுக்கு திரும்ப கிடைக்கும். ஆனால் தற்போது தேவைக்கேற்ப தொகையை பணி காலத்திலேயே எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது. ஆனாலும் இந்த பிஎஃப் தொகையை முழுவதுமாக எடுத்தால் மட்டும் தான் அது ஊழியர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு நாட்டில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகமான போது மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அமலுக்கு வந்தது.அதன் பின்னர் மத்திய அரசுக்கு செலவுகள் அதிகரித்ததால் அரசு ஊழியர்கள் மற்றும் பென்சனர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் நிறுத்திவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கொரோனா தொற்றுநோய் காரணமாக பல மாத கால உதவித்தொகை முடக்கத்திற்கு பிறகு, 2021 ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் மிகச் சமீபத்திய உயர்வுகள் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 47.14 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் அக்டோபர் மாதம் மத்திய அமைச்சரவை அகவிலைப்படியை 3 சதவீதம் முதல் 31 சதவீதம் வரை அதிகரித்து உள்ளது.
தற்கொலை செய்து கொள்ளப்போகும் வெண்பா, தடுத்த ஷர்மிளா – “பாரதி கண்ணம்மா” சீரியலில் இனி வருபவை!
இந்நிலையில் தற்போது பென்சன் விதிகளை திருத்துவதற்கான நிலைக்குழுவின் 32 வது கூட்டம் சென்ற ஏப்ரல் 10 ஆம் தேதி நடைபெற்றது. இதில் பென்சனர் நலத் துறை இணையமைச்சர் ஜித்தேந்திர சிங், அரசு அதிகாரிகள், ஓய்வூதியதாரர்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் இந்தக் கூட்டத்தில் பேசிய நிதியமைச்சகத்தின் பிரதிநிதி ஒருவர், அரசு ஊழியர்களுக்கும், பென்சனர்களுக்கும் நிறுத்திவைக்கப்பட்ட அகவிலைப்படியும், அகவிலை நிவாரணமும் வழங்கப்படாது என்று தெரிவித்துள்ளார். அதனை கேள்வி பட்ட பென்சனர்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி விட்டது.