தமிழக அரசு பள்ளிகளில் ஜூன் மாதம் மாணவர் சேர்க்கை – ஆசிரியர் சங்கம் கோரிக்கை!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டு துவங்க இருக்கும் நிலையில் ஜூன் மாதம் முதல் தேதியிலேயே மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் என ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் / கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இதனால் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு தான் பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. கொரோனாவால் சரியாக மாணவர்களுக்கு பாடங்கள் எதுவும் நடத்தாத காரணத்தால் கல்வித்திறன் மிகவும் பாதிப்படைந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு பேருந்துகளில் கட்டணமில்லா இலவச பயணம் – போக்குவரத்துத்துறை முக்கிய அறிவிப்பு!
எனவே அதனை மேம்படுத்த பல மாநிலங்களில் கோடை விடுமுறையும் குறைக்கப்பட்டு பள்ளிகள் நடத்தப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு அதிகமான விடுமுறை விடப்பட்டதால் சனிக்கிழமைகளில் பள்ளி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டன. இருப்பினும் முழு அளவில் பாடங்கள் நடத்தி முடிக்க இயலவில்லை. இதனால் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பாடங்களில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும் என அறிவித்திருந்தது.
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து கோடை விடுமுறை முடிந்து மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதி பள்ளிகள் மறுதிறப்பு என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாணவர் சேர்க்கை பற்றி இதுவரை அறிவிப்பு இல்லாதது மக்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஜூன் முதல் தேதியே தொடங்க வேண்டும் மற்றும் எதிர்வரும் காலத்தில் அரசு, தனியார் பள்ளிகளுக்கும் மாணவர் சேர்க்கையை ஒரே நாளில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் பி.கே இளமாறன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.