மீண்டும் நடிகை ஆலியா மானஸாவுக்கு நடந்த சீமந்தம் – எத்தனை முறை? வைரலாகும் வீடியோ!
பிரபல சின்னத்திரை நடிகை ஆலியா மானஸாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வளைகாப்பு நிகழ்வு பிரமாண்டமாக நடைபெற்றிருந்த நிலையில் மீண்டும் ஒரு முறை சீமந்த நிகழ்வு நடந்திருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை ஆலியா மானஸா
தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் அத்தனை பேரும் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ஒரு நிகழ்வு என்னவென்றால் நடிகை நடிகை ஆலியா மானஸாவின் குழந்தை பிறப்பு தான். இவரது குழந்தைக்கு ரசிகர்கள் ஏன் எதிர்பார்க்க வேண்டும் என்று கேட்டால், பிரசவத்திற்கு முன் அவர்கள் ஏற்படுத்திய எதிர்பார்ப்புகள் அப்படி. விஜய் டிவியின் ‘ராஜா ராணி 2’ என்ற சூப்பர் ஹிட் சீரியலில் நடித்து வந்த நடிகை ஆலியா மானஸா சமீபத்தில் 2வது முறையாக கர்ப்பமானார்.
TN Job “FB Group” Join Now
ஏற்கனவே நடிகை ஆலியா மானஸா மற்றும் சஞ்சீவ் தம்பதிக்கு 2 வயதில் ஐலா என்ற பெண் குழந்தை இருக்கிறது குறிப்பிடத்தக்கது. இப்போது 2வது முறையாக கர்ப்பமான ஆலியா மானஸாவுக்கு இன்னும் ஒரு சில நாட்களில் குழந்தை பிறக்க இருக்கிறது. அதனால் அவர் ‘ராஜா ராணி 2’ சீரியலில் இருந்தும் வெளியேறி இருக்கிறார். இதற்கிடையில் அவ்வப்போது வளைகாப்பு விருந்துக்கு சென்று வந்த ஆலியா இது தொடர்பான வீடியோக்களை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.
தொடர்ந்து கடந்த மார்ச் 20ம் தேதி ஐலா பாப்பாவின் பிறந்தநாளன்று நடிகை ஆலியா மானஸாவுக்கு வளைகாப்பு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். சரி, அடுத்து ஆலியா மானஸாவுக்கு குழந்தை பிறக்க வேண்டியது தான் பாக்கி இருக்கிறது. அது ஆண் குழந்தையாக இருக்குமா அல்லது ஐலா போல ஒரு லைலா பிறக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். இந்த நிலையில் மீண்டுமாக ஆலியா மானஸாவுக்கு சீமந்தம் நடைபெற்றிருக்கிறது.
ராஜா ராணி 2 சீரியலில் புதிய சந்தியா வருகைக்கு பிறகு சரவணனுக்கு ஏற்படும் சோகம் – ரசிகர்கள் ஷாக்!
இது எத்தனையாவது முறை என்று அவருக்கே குழப்பம் ஆவது போல, ஒரு பிரசவத்திற்கு பல முறை சீமந்தம் நடத்தி இருக்கிறார் ஆலியா மானஸாவின் கணவர் நடிகர் சஞ்சீவ். இந்த நிகழ்வில் ஆலியா இஸ்லாமிய முறைப்படி தோன்ற அவருக்கு சடங்குகள் எல்லாம் செய்து முடித்தவுடன், ஸ்வீட், பணம் எல்லாம் கொடுத்து சிறப்பாக முடிந்திருக்கிறது இந்த சீமந்தம். குறிப்பாக, இந்த கொண்டாட்டத்தில் ஐலா பாப்பா ஆலியாவுக்கு நலங்கு வைத்திருக்கிறார். இந்த கியூட்டான காட்சிகள் அத்தனையும் தற்போது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.