ராஜா ராணி 2 சீரியலில் புதிய சந்தியா வருகைக்கு பிறகு சரவணனுக்கு ஏற்படும் சோகம் – ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் பங்கு பெரும் சீரியலில் ஒன்று ராஜா ராணி 2. இதில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆலியா தற்போது இரண்டாவது குழந்தை பிறக்க உள்ள நிலையில் தொடரை விட்டு விலகி அவருக்கு பதிலாக நடிகை ரியா நடித்து வருகிறார். அவர் வந்த நேரம் சரவணனுக்கு ஒரு விபரீதம் நடந்துள்ளது போன்று ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.
ராஜா ராணி 2:
விஜய் தொலைக்காட்சியில் பிரமாண்டமாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 ல் ஆலியா படித்த பெண்ணாகவும் சித்து படிக்காத ஸ்வீட் கடை நடத்துபவராகவும், இவர்கள் இருவரையும் சந்தர்ப்ப சூழ்நிலை கல்யாணம் என்ற பந்தத்துக்கு முடிச்சு போட்டு விடுகிறது. சந்தியா மாமியாரை பொறுத்தவரை தனது மருமகள் வீட்டிற்கு நல்ல மருமகளாகவும், எனது மகனுக்கு நல்ல மனைவியாகவும், தனது குழந்தைகளுக்கு நல்ல அண்ணியாகவும் இருக்க வேண்டும். ஆனால் தனது மனைவியின் ஆசை போலீஸ் அதிகாரி ஆவது என்பதை அறிந்து கொண்ட கணவர் சரவணன் அவரின் ஆசையை நிறைவேத்த முயற்சிகள் எடுத்து வந்தார்.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் சந்தியா குடும்பத்திற்காக தனது ஆசையை மறைத்து படிக்க செல்ல மாட்டேன் என்று கூறி வருகிறார். தற்போது சந்தியாவாக நடித்த ஆலியா இரண்டாவது குழந்தை பிறக்க உள்ள காரணத்தால் சீரியலை விட்டு விலகி அவருக்கு பதிலாக மாடல் நடிகை ரியா அவர்கள் சந்தியா கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தமாகி அந்த காட்சிகளில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ ஒன்றில் சரவணன் ஸ்வீட் கடையை ஆய்வு செய்ய போலீஸ் ரைடு வருகிறது. அங்கு கலப்படம் இருக்கிறது என்று கூறி சரவணனை போலீஸ் கைது செய்து ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று சரவணனை அவர்கள் கண்டபடி அடிக்கின்றனர்.
தமிழக அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்புகள் வெளியீடு!
இதனால் மொத்த குடும்பமும் பதறிப் போகிறது. மேலும், இதைக் கண்டு துடித்துப் போகும் சந்தியா கதறி அழுது உங்களின் இந்த நிலமைக்கு நான் தான் காரணம் என்று கூறுகிறார். உடனே சரவணன் அவரிடம் உங்களைப் போல திறமை உள்ளவர்கள் போலீஸ் வேலைக்கு வராமல் ஏதேதோ காரணம் சொல்லி ஒதுங்கி போவதால் தான் இது போன்ற அநியாயங்களும் அக்கிரமங்களும் நடக்கிறது என்று சொல்கிறார். இதை கேட்ட சந்தியா சரவணன் கையை பிடித்து உங்களுக்காக நான் கண்டிப்பா படிக்கிறேன் என்று சொல்லி அந்த இடத்தை விட்டு நகர்கிறார்.