செய்தி வாசிப்பாளர் கண்மணியை கரம் பிடிக்கும் பிரபல சீரியல் நடிகர் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!
அன்றாட வாழ்வில் தினமும் செய்திகள் பார்ப்பது தாண்டி இவங்களுக்காகவே செய்தி பார்க்கும் மக்களும் உண்டு. தன் அழகு தமிழ் உச்சரிப்பு அழகினால் மக்கள் மனதை ஈர்த்த செய்தி வாசிப்பாளர் கண்மணி அவர்கள் சீரியல் நடிகரை காதலித்து வருவதாக சொல்லப்பட்ட தகவலை தொடர்ந்து தற்போது அவர்கள் இருவரின் திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கண்மணிக்கு கல்யாணம்:
செய்தி வாசிப்பாளர்கள் அனிதா சம்பத், மற்றும் சரண்யா துரடி சுந்தராஜ் வரிசையில் கண்மணியும் ஒருவர். இவர் அழகிலும், தமிழ் வாசிக்கும் விதத்திலும் பார்வையாளர்கள் மனதை ஈர்த்தவர். காவிரி டிவி, மாலை முரசு, ஜெயா டிவி என பல்வேறு தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த இவர் தற்போது சன் டிவியில் பணியாற்றி வருகிறார். இவருக்கு சினிமா துறையில் பல வாய்ப்புகள் வந்தும் விருப்பம் காட்டாமல் செய்திகள் வாசிப்பதே என் கனவும் ஆசையும் என்று தவிர்த்து வருகிறார். இப்படி கடும் பிஸியாக உள்ள கண்மணி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நவீனுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து ‘ஃபேமிலி’ என குறிப்பிட்டு இருந்தார்.
பிறகு நவீன் அவர்களும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகளிர் தினத்தையொட்டி சில புகைப்படங்களை ஷேர் செய்ததை தொடர்ந்து கண்மணிக்கும் கலர்ஸ் டிவியில் “இதயத்தை திருடாதே” சீரியலின் கதாநாயகன் நவீன் அவருக்கு காதல் மலர்ந்தது என்று சொல்லப்பட்டது. ஆனால் இருவர் தரப்பில் எந்த ஒரு தகவலும் வராமல் இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாகவே அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொள்ளப்படும் புகைப்படங்களை ஷேர் செய்து அதில் மூலமாக கண்மணியும், நவீனும் காதல் செய்வது தெளிவாகியது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு விருது விழாவில் பங்கேற்ற இருவரும் காதல் செய்வதாகவும், அவர்களுக்கு வருகிற மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், ஜூன் மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என்றும் அவர்கள் கூறி இருக்கின்றனர். தற்போது இணையத்தில் அந்த விருது விழாவில் நவீன் அவர்கள் கனமணிக்கு செய்த ப்ரொபோஸ் காட்சிகள் வைரலாகி வருகிறது. அவர்களது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.