அதிகாலையில் சென்னை மக்களுக்கு வந்த ஷாக் நியூஸ் – ஆவின் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை!

0

அதிகாலையில் சென்னை மக்களுக்கு வந்த ஷாக் நியூஸ் – ஆவின் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை!

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இன்று (மார்ச் 27) ஆவின் நிறுவனம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆவின் அறிவிப்பு

தமிழகத்தில் தினமும் ஆவின் நிறுவனம் சார்பில் 33 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. அந்த வகையில் சென்னை மக்களுக்கு ஆவின் நிறுவனம் இன்று காலை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ஒரு சில பகுதிகளில் ஆவின் பால் விநியோகம் சில மணி நேரம் தாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலையில் பால் இல்லாத நிலை ஏற்பட்டதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர்.

தமிழக சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டணம் உயர்வு – வாகன ஓட்டிகள் அதிருப்தி!

இது குறித்து நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், தவிர்க்க முடியாத காரணங்களால் பெரம்பூர், அண்ணாநகர், அயனாவரம், வில்லிவாக்கம், கொரட்டூர், மயிலாப்பூர், வேளச்சேரி, தாம்பரம் மற்றும் அடையார் ஆகிய பகுதிகளில் பால் விநியோகம் சில மணி நேரம் தாமதமாக விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆவின் நிர்வாகம் பல்வேறு போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொண்டு அனைத்து இடங்களுக்கும் சீரான பால் விநியோகத்தை மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பினும், இந்த கால தாமதத்திற்கு ஆவின் நிறுவனம் வருந்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் ஒப்பந்த வாகன ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாலேயே பால் விநியோகம் தாமதமானதாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!