தமிழக சுங்கச்சாவடிகளில் மீண்டும் கட்டணம் உயர்வு – வாகன ஓட்டிகள் அதிருப்தி!
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் நாடு முழுவதும் மொத்தம் 565 சுங்கச்சாவடிகள் உள்ளன. அவற்றில் தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்தப்படும். சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களை கொண்டு சாலைகள் சீரமைப்பு மற்றும் அவசர உதவி போன்றவற்றிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில் பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஆனது அறிவிப்பு ஓடற வெளியிட்டுள்ளது. அதில் பரனூரில் ஒரு வழி பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பணம் ஆகியவற்றுக்கான கட்டணம் ரூ.5 முதல் 10 வரை உயர்த்தப்பட்டுள்ளது என்றும் ஆத்தூர் சுங்கச்சாவடியில் ஒரு வழி பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயண கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்த்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.