பிரதான் மந்திரி கிசான் (PM Kisan) திட்டத்தில் உள்ளவர்கள் கவனத்திற்கு – ஆதார் இணைப்பு கட்டாயம்!

0
பிரதான் மந்திரி கிசான் (PM Kisan) திட்டத்தில் உள்ளவர்கள் கவனத்திற்கு - ஆதார் இணைப்பு கட்டாயம்!
பிரதான் மந்திரி கிசான் (PM Kisan) திட்டத்தில் உள்ளவர்கள் கவனத்திற்கு - ஆதார் இணைப்பு கட்டாயம்!
பிரதான் மந்திரி கிசான் (PM Kisan) திட்டத்தில் உள்ளவர்கள் கவனத்திற்கு – ஆதார் இணைப்பு கட்டாயம்!

மத்திய அரசு விவசாயிகளுக்கு என்று பல்வேறு நலத் திட்டங்களை செயற்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. தற்போது இந்த திட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆதார் இணைப்பு

மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி அன்று பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் ஒரு வருடத்திற்கு ரூ.6000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை 3 தவணைகளாக 4 மாதங்களுக்கு ஒரு முறை என நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படுகிறது. நாடு முழுவதும் இத்திட்டத்தின் கீழ் சுமார் 8.5 கோடி விவசாயிகள் இணைந்துள்ளனர்.

மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – முதலமைச்சர் உத்தரவு!

இதுவரை பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு 10 தவணையாக உதவித்தொகை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 11வது தவணை எப்பொழுது வழங்கப்படும் என்று விவசாயிகள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் மத்திய அரசு இத்திட்டம் குறித்து புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. அதாவது இந்த திட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களின் வங்கி கணக்குடன் ஆதார் குறித்த விவரத்தை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கூறியதாவது, இத்திட்டத்தின் மூலம் 1,28,000 விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர்.

மேலும் 11 தவணையை பெறுவதற்கு தங்களின் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். ஏனெனில் மத்திய அரசு இத்திட்டத்தில் ஆதார் எண் அடிப்படையில் நிதி விடுவிப்பு செய்ய உள்ளது. அத்துடன் ஆதார் எண்ணுடன் தங்களின் மொபைல் எண்ணையும் இணைத்திருக்க வேண்டியது அவசியமானதாகும் என்று கூறியுள்ளார். இதனை செய்ய விரும்பும் விவசாயிகள் www.pmkisan.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று ‘Farmers Corner’ வசதியில் e-KYC விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். இப்போது ஆதார் எண்ணை உள்ளிட்டு OTP எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். இதனை வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் முறையில் செய்து முடிக்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!