மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – முதலமைச்சர் உத்தரவு!
பஞ்சாப் மாநிலத்தில் சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் அவர்களின் தியாக தினத்தை முன்னிட்டு அம்மாநில முதல்வர் பகவந்த் மான் இன்று (மார்ச் 23) பொது விடுமுறை அறிவித்துள்ளார். அம்மாநிலத்தில் இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை:
இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலையின் தாக்கத்தில் இருந்து மக்கள் மீண்டு வரும் நேரத்தில் அரசு அனுமதி உடன் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் வழக்கம் போல நடைபெற்று வருகிறது. கடந்த வருடம் கொரோனா அச்சுறுத்ததால் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால் நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு கட்டாயம் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 10,12ம் வகுப்பை தொடர்ந்து மற்ற வகுப்புகளுக்கும் ஆண்டு தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – 2ம் கட்ட திருப்புதல் தேர்வுக்கான பணி மும்முரம்!
இதனையடுத்து மாணவர்கள் தேர்வுக்கு ஆயத்தமாகி வருகின்றனர். இந்த நேரத்தில் மீண்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் அவர்களின் தியாக தினத்தை முன்னிட்டு பஞ்சாப் மாநிலத்தில் மார்ச் 23 (இன்று) அம்மாநிலத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் 18 -வது முதல்வராக பகவந்த் மான் இன்று பதவியேற்றார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதன் பிறகு சட்டப்பேரவையில் பேசிய அவர் முதல்வர் சுதந்திரப் போராட்ட வீரர்களான பகத்சிங்,சுக்தேவ், ராஜகுரு ஆகியோரின் நினைவு ஆம் தேதி மாவீரர் தினத்தையொட்டி மார்ச் 23 அன்று பொது விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ,பகத்சிங்கின் சொந்த கிராமமான கட்கர் கலனுக்கு நேரில் சென்று அவருக்கு மரியாதையை செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். ஈந்த பொது விடுமுறையை முன்னிட்டு அம் மாநிலத்தின் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.