விரைவில் ஆதார் அட்டை செல்லாது? மத்திய அரசின் முக்கிய விளக்கம்!
மத்திய அரசாங்கம் வழங்கி வரும் அடையாள ஆவணமான ஆதார் அட்டைகள் தற்போது செயலிழந்து போவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், உங்கள் ஆதார் அட்டையின் நிலைமையை சரிபார்க்கும் எளிய வழிமுறைகளை இப்பதிவில் காணலாம்.
ஆதார் அட்டைகள்
மத்திய அரசால் வழங்கப்பட்ட ஆதார் அட்டைகள் முக்கிய அடையாள ஆவணமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வங்கி கணக்கு துவங்குவது, பான் கார்டு பெறுவது முதல் அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் பெறுவது வரைக்கும் இந்த ஆதார் அட்டைகள் அவசியமானதாக கருதப்படுகிறது. இந்த ஆதார் அட்டைகள் மத்திய அரசின் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த ஆதார் அட்டையில் ஒவ்வொரு தனி நபரின் பெயர், முகவரி, வயது, பிறந்த தேதி ஆகிய விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
Exams Daily Mobile App Download
இந்த விவரங்களை அவ்வப்போது புதுப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும். இப்போது ஆதார் வைத்திருக்கும் ஒவ்வொரு பயனர்களும் அதனை பான் கார்டு, வங்கிக் கணக்கு மற்றும் இது போன்ற நிதி சார்ந்த சேவைகளில் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையில் மத்திய அரசால் வழங்கப்படும் இந்த ஆதார் அட்டைகள் ஒருவரது வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். அந்த வகையில் ஆதார் அட்டை வைத்திருக்கும் ஒருவர் இறந்து போனால் மட்டுமே அவரது ஆதார் அட்டைகள் செயலிழந்து போகும். இப்படி இருக்கையில் இந்த ஆதார் அட்டைகளில் நிறைய மோசடிகள் ஏற்படுவதாக புகார்கள் எழுந்திருக்கிறது.
தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.300 வரை குப்பை வரி வசூல் – மாநகராட்சி அறிவிப்பு!
இதனைக் கருத்தில் கொண்டு நம்பகத்தன்மை காரணமாக சில ஆதார் அட்டைகளை அரசாங்கம் செயலிழக்க செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் ஒருவரது பெயரில் பல ஆதார் அட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் அந்த அட்டைகள் செயலிழக்கப்பட்டுள்ளது. இப்போது உங்கள் ஆதார் அட்டைகள் செயலிழந்து இருக்கிறதா என்பதை நீங்கள் UIDAIன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் முதலில் UIDAI அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை திறந்தவுடன் அதில் இருக்கும் Verify Aadhar number என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உங்கள் ஆதார் விவரங்களை சரிபார்க்கும்படி பயனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.