தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.300 வரை குப்பை வரி வசூல் – மாநகராட்சி அறிவிப்பு!
தமிழகத்தில் நெகிழி குப்பைகளை குறைக்க மீண்டும் மஞ்சள்பை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாநகராட்சியில் ஒவ்வொரு வீட்டிற்கும் குப்பை வரி ஆண்டிற்கு ரூ.120 முதல் ரூ, 300 வரை வசூலிக்கப்படுகிறது.
குப்பை வரி:
தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு வரி விதிப்புதாரர்களுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரியானது வீடுகளின் சதுர அடிக்கு தகுந்தவாறு மாதந்தோறும் நிர்ணயம் செய்யப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு குடியிருப்புகளுக்கான சொத்து வரிக்கேற்ப, மாதத்துக்கு ரூ.10 முதல், 50 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கோவை மாநகராட்சியில் உள்ள மொத்தம் 100 வார்டுகளில் 5.22 லட்சம் வரி விதிப்புதாரர்கள் இருக்கின்றனர்.
Exams Daily Mobile App Download
மத்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் மாநகராட்சியில் குப்பை எடுக்க கட்டணம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆட்சியின் போது குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கப்பட்டது. ஆனால் அதன் பின் பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் குப்பை வரி வசூலிப்பது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது குப்பை வரி வசூலிக்க வேண்டும் என தணிக்கை துறை ஆட்சேபனை தெரிவிப்பதால் மீண்டும் வரி வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசில் Degree பெற்றவர்களுக்கு வேலை ரெடி – ரூ.2 லட்சம் வரை ஊதியம் பெற வாய்ப்பு !
அதன் படி நடப்பு நிகழ்வாண்டு முதல் குப்பைவரி வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில் குடியிருப்புகளுக்கு சொத்து வரிக்கேற்ப மாதம் ரூ.10 முதல், 50 ரூபாய் வரை குப்பை வரி வசூலிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் படி ஆறு மாதத்துக்கு ஒருமுறை ரூ.60, ரூ.120, ரூ.180, ரூ.240, ரூ.300 என, ஆண்டுக்கு இரு முறை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையானது ஒவ்வொரு வரிவிதிப்புதாரர்கள் கணக்கிலும் சேர்க்கப்படுகிறது. இது குறித்து மாநகராட்சி இணையதளத்தில் சொத்துவரி விதிப்பு எண்ணை பதிவிட்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.