Post Office இல் தினமும் ரூ.333 முதலீடு செய்தால் 16 லட்சம் ரிட்டன்ஸ் – சூப்பரான சேமிப்பு திட்டம்!
இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்களில் சேமிப்பதன் மூலமாக 2 மடங்கு லாபத்தை பெற முடிகிறது. தற்போது அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் உள்ள ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தின் பலன்களை பற்றி விரிவாக பார்ப்போம்.
சேமிப்பு திட்டம்
இந்திய அஞ்சல் துறையில் குறைந்த காலத்தில் அதிக லாபம் தரும் வகையில் பொது வருங்கால வைப்பு நிதி, மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம், செல்வ மகள் சேமிப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான சேமிப்பு திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டங்களில் தற்போது பெரும்பாலானவர்கள் தங்களின் சேமிப்பு பணத்தை முதலீடு செய்து வருகின்றனர். ஏனெனில் வங்கிகளை காட்டிலும் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் இரட்டிப்பு பலன்களை பெற முடிகிறது. அத்துடன் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவதால் சேமிப்பு பணத்திற்கு 100% பாதுகாப்பும் கிடைக்கிறது.
TN Job “FB Group” Join Now
அதனால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் கூட இத்திட்டத்தில் இணைந்து பயன் பெற்று வருகின்றனர். தற்போது ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் கிடைக்ககூடிய பலன்களை பற்றி விரிவாக பார்ப்போம். இதில் மாதந்தோறும் ரூ.10,000 செலுத்தினால் முதிர்வு காலத்தின் முடிவில் லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியும். ஏனெனில் இத்திட்டத்தில் ஆண்டுக்கு 5.8 சதவீதம் வரை வட்டி கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.100 முதல் அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செலுத்தலாம். அத்துடன் முதிர்வு காலத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து கொள்ளலாம்.
TNUSRB SI தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி?
இத்திட்டத்தில் 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் முதல் இந்த திட்டத்தில் கணக்கை தொடங்க முடியும். அத்துடன் தனிநபர் கணக்கு மற்றும் கூட்டுக்கணக்கை தொடங்கலாம். மேலும் இந்த திட்டத்தில் கணக்கு தொடங்கிய நாளில் இருந்து 1 ஆண்டுக்கு பிறகு 50% வரை கடன் பெறும் வசதியும் உள்ளது. இதையடுத்து இத்திட்டத்தில் நீங்கள் தினமும் ரூ. 333 முதலீடு செய்தால் மாதத்திற்கு ரூ.10,000 செலுத்த வேண்டும். இப்போது 10 ஆண்டுகள் என்ற முதிர்வு காலத்தைக் தேர்ந்தெடுத்தால் ஆண்டுக்கு 5.8% வட்டி விகிதம் கணக்கிடப்பட்டு முதிர்வு காலத்தின் முடிவில் ரூ.16.28 லட்சம் வரை பெற முடியும். அத்துடன் இந்த திட்டத்தின் கணக்கை ஒரு தபால் நிலையத்திலிருந்து மற்றொரு தபால் நிலையத்துக்கு மாற்றும் வசதிகளும் உள்ளது.