தமிழகத்தில் உள்ள வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு – திருநெல்வேலியில் முகாம்!
தமிழகத்தில் உள்ள திருநெல்வேலியில் இருக்கும் ராணி அண்ணா கல்லூரியில் வருகின்ற ஏப்ரல் 8 ஆம் தேதியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அதனால் தகுதியானவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக படித்து முடித்த பட்டதாரி இளைஞர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்ற வருடம் இறுதியில் தமிழகத்தில் நிலவி வந்த ஊரடங்கில் இருந்து பல தளர்வுகள் அறிவித்தனர். தற்போது தான் தமிழகம் முன்பு இருந்த இயல்பு நிலைக்கு வந்துள்ளது. மேலும் அரசின் தரப்பில் இருந்து பல வேலைவாய்ப்புகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த வருட துவக்கத்தில் tnpsc குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்புகளை வெளியிட்டது. இதனை தொடர்ந்து அடுத்தாக குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகளையும் வெளியிடவுள்ளது.
மின் துறையில் Diploma படித்தவருக்கு வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!
இந்நிலையில் அரசு சார்பில் இளைஞர்களுக்கு பல வேலைவாய்ப்புகளை அவ்வப்போது அறிவித்து இருந்தாலும் தனியார் நிறுவனம் சார்பிலும் தமிழகத்தில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராணி அண்ணா கல்லூரியில் வருகின்ற ஏப்ரல் 8 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடக்க இருப்பதாக திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC GROUP 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – முழு விவரம் இதோ!
மேலும் இந்த முகாமில் கலந்து கொள்ள உள்ளவர்கள், பணி நியமனம் பெறும் பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது. மேலும் இந்த முகாமில் கலந்து கொள்ள இருப்பவர்கள் தங்களது கல்வி சான்றிதழ்கள் மற்றும் இதர சான்றிதழ்களையும் கொண்டு வர வேண்டும். மேலும் இந்த வேலைவாய்ப்பில் நிறைய தனியார் நிறுவனங்களும் மற்றும் நிறைய வெளிநாட்டு நிறுவனங்களும் பங்கு பெற உள்ளன.