அம்மா பாக்கியாவிற்காக சண்டை போடும் செழியன், ஆதரவளிக்கும் குடும்பம் – சீரியலில் அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் தமிழகமே எதிர்பார்த்தது போல கோபி குடும்பத்திடம் வசமாக மாட்டிக் கொண்டார். அவர் செய்ததை எல்லாம் கேட்டு செழியனிற்கே கோவம் வருகிறது. இந்நிலையில் அடுத்து வரும் எபிசோடுகளில் என்ன காட்சிகள் வர இருக்கிறது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கதைக்களம் சூடுபிடித்துள்ளது. இத்தனை நாட்களாக குடும்பத்தை ஏமாற்றி வந்த கோபி தற்போது வசமாக சிக்கி இருக்கிறார். அவர் சொன்ன பொய்கள் அனைத்தையும் பாக்கியா குடும்பத்தில் அனைவர் முன்னிலையிலும் சொல்லிவிடுகிறார். மேலும் ராதிகா உடன் தான் கோபி பழகுவதாக சொல்ல அதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பதிலுக்கு தாத்தாவும் எழிலும் கோபி செய்த தவறுகளை எல்லாம் சொல்லுகின்றனர்.
Exams Daily Mobile App Download
மேலும் பாக்கியா, கோபி தனது மனைவியை விவாகரத்து செய்வதாக ராதிகா சொன்னதை வைத்து கோர்டுக்கு தன்னை அழைத்துச் சென்று கோபி ஏமாற்றிய விஷயத்தை கண்டுபிடிக்கிறார். அதை ஈஸ்வரி நம்பாமல் இருக்க அந்த நேரம் பார்த்து கோர்ட்டில் இருந்து நோட்டீஸ் வருகிறது. அதனால் கோபியை பற்றி பாக்கியா சொன்னது அனைத்தும் உண்மையாகிவிட்டது. கோபி இத்தனை பொய் சொன்னதால் இனிமேல் இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என பாக்கியா வீட்டை விட்டு வெளியேறி செல்கிறார்.
கோபியை கேவலமாக பேசி வீட்டை விட்டு அனுப்பும் செழியன் – அதிரடி திருப்பங்களுடன் ‘பாக்கியலட்சுமி’!
இத்தனை நாட்கள் கோபியை நம்பிய செழியன் கூட இந்த விஷயத்தில் கோபி மீது கோவமாக இருக்கிறார். அம்மாவை ஏமாற்ற அவர் செய்தது எல்லாம் செழியனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதனால் இனி வரும் எபிசோடுகளில் செழியன் அம்மாவிற்கு ஆதரவாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. செழியன் அம்மா இந்த வீட்டை விட்டு போகக் கூடாது, இனி நீங்க தான் இந்த வீட்டை விட்டு செல்ல வேண்டும் என அதிரடியாக சொல்லப் போகிறார். இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.