கோபியை கேவலமாக பேசி வீட்டை விட்டு அனுப்பும் செழியன் – அதிரடி திருப்பங்களுடன் ‘பாக்கியலட்சுமி’!
கோபிக்கும் ராதிகாவுக்கும் தான் தொடர்பு இருக்கிறது என்கிற உண்மை குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே தெரிந்துவிட்டது. இந்நிலையில், செழியன் கோபியை கண்டபடி திட்டி நீங்கள் தான் வீட்டை விட்டு செல்ல வேண்டும் என கூறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியை பற்றிய அனைத்து உண்மைகளும் குடும்பத்தினர்கள் அனைவருக்குமே தெரிந்துவிட்டது. ஆனாலும் கோபி உண்மையை ஒத்துக் கொள்ளாமல் நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்று எனக்கு சுத்தமாக புரியவில்லை என நாடகத்தை நடத்தியபடியே தான் இருக்கிறார். ஆனாலும் கோபிக்கு தைரியம் ரொம்பவே அதிகம் தான். கையும் களவுமாக பாக்கியாவிடம் மாட்டிக் கொண்டாலும் கூட பொய் சொல்லி எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என்றுதான் நினைக்கிறார்.
Exams Daily Mobile App Download
கடைசி வரைக்குமே ஈஸ்வரி கோபி மீது நம்பிக்கை வைத்து எப்படியும் கோபி தவறு செய்திருக்கவே மாட்டார் என உறுதியாக இருந்தார். பின்னர் பாக்கியா ராதிகாவுடன் கோபிக்கு தொடர்பு இருக்கிறது என அழுத்தமாகக் கூறியதால் வேறு வழியில்லாமல் ஈஸ்வரி நம்புகிறார். இது மட்டுமல்லாமல் செழியன் மற்றும் இனியா இருவருமே கோபி மீது அளவு கடந்த பாசமும் நம்பிக்கையும் வைத்திருந்தனர். மேலும், குடும்பத்தில் உள்ள அனைவரும் கோபியின் மீது வைத்த மொத்த நம்பிக்கையும் சுக்குநூறாய் உடைந்துவிட்டது. அதாவது, இவ்வளவு ஒரு பாசக்கார குடும்பத்தை விட்டுவிட்டு ராதிகாவுடன் கோபி தொடர்பு வைத்திருந்ததை குடும்பத்தினர்கள் யாராலுமே சகித்துக் கொள்ளவே முடியவில்லை.
அதுவும் பாக்கியாவின் நெருங்கிய தோழியான ராதிகாவுடனே தொடர்பு வைத்திருக்கிறார் என்றால் கோபிக்கு எவ்வளவு தைரியம் இருக்கும். பின்னர், பாக்கியா கோபியிடம் உங்களுக்கு பிடித்த மாதிரி ராதிகாவுடன் வாழுங்கள். இத்தனை நாட்கள் எனக்கே தெரியாமல் உங்களுக்கு நான் தொந்தரவாக இருந்திருக்கிறேன். இதற்கு மேலும் உங்களுக்கு தொந்தரவாக இருக்க மாட்டேன் என கூறி பாக்கியா வீட்டை விட்டே கிளம்புகிறார். குடும்பத்தினர்கள் பாக்கியாவை எவ்வளவு தடுத்தும் பாக்கியா கேட்பதாக இல்லை. இந்நிலையில், கோபியிடம் செழியன் நீங்கள் இப்படி செய்வீர்கள் என்று நினைத்து கூட பார்க்கவே இல்லை என கோபியை கண்டபடி திட்டும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.