தமிழகத்தில் டிசம்பர் 7 முதல் கல்லூரிகள் திறப்பு !
தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளை வரும் டிசம்பர் 07ம் தேதி முதல் திறந்து கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. அரசு அடுத்த கட்ட ஊரடங்கு தளர்வு அறிவிப்புகளில் இதனை குறிப்பிட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள்
கல்லூரிகள் !
நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. ஆயினும் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட்டது.
அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டாலும் இன்னும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டாலும் கல்லூரிகள் திறப்பிற்கு இன்னும் வழிவகை செய்யப்படவில்லை. இவ்வாறு சென்றால் மாணவர்களின் எதிர்காலம் மட்டுமில்லாது, நாட்டின் எதிர்காலத்திற்கும் பாதிப்பு ஏற்படும் என பல்வேறு தரப்பு கல்வி வாரியங்களிடம் இருந்து கோரிக்கைகள் வெளியாகின.
மருத்துவ கல்லூரிகள் திறப்பு !
தேசிய மருத்துவ கவுன்சில் நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளை கல்லூரிகளை திறக்க அனுமதி அளிக்குமாறு, மத்திய அரசிற்கு கோரிக்கை வைத்தது. இதனை ஏற்று அனுமதியும் வழங்கப்பட்டது. ஆனாலும் அவை மாநில அரசின் நிலைப்பாட்டை பொறுத்தது என்பதனால் தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என எதிர்பார்ப்பு அதிகரித்தது.
தற்போது அடுத்த கட்ட ஊரடங்கு தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு அதில் வரும் டிசம்பர் 07ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்க அனுமதி அளித்துள்ளது. மேலும் கல்லூரிகளில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு வகுப்புகள் வரும் டிசம்பர் 01ம் தேதி முதல் தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்