தமிழக பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை – இனி நேரடியாக முழு ஆண்டு தேர்வு தான் !
தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறப்பு இல்லை என்பதனால் அரையாண்டு தேர்வும் ரத்தாகவே பெரும்பான்மையான வாய்ப்புகள் உள்ளது. இதன் காரணமாக நேரடியாக முழு ஆண்டு தேர்வுகள் தான் நடத்தப்படும் என்றும் அதற்கான பாடத்திட்டங்களை 10 நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டு உள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள்
கொரானா தொற்று நோய் தீவிரமாக பரவி வந்ததால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த சில மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு கிடக்கின்றன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. தற்போது அரையாண்டு தேர்வுகள் நெருங்குவதால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று கேள்வி எழும்பியது.
நேரடியாக முழு ஆண்டு தேர்வு
இதற்கு பதில் அளிக்கும் விதமாக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்ததாவது, தற்போது கொரான நோய் தொற்று காரணமாக தமிழகம் இன்னும் பழைய நிலைக்கு திரும்பவில்லை. எனவே பள்ளி திறப்பு பற்றி இப்போது எந்த முடிவும் எடுக்கமுடியாது என்று கூறியுள்ளார். இதனால் அரையாண்டு தேர்வுகள் நடத்த வாய்ப்பு இல்லை என்ற காரணத்தில் நேரடியாக முழு ஆண்டு தேர்வு வைக்கப்பட வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பாடத்திட்டங்கள் இன்னும் 10 நாளுக்குள் அறிவிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்