1 முதல் 8ம் வகுப்பு வரை நவம்பரில் பள்ளிகள் திறப்பு !!!
ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வரும் நவம்பர் மாதம் 02 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என ஆந்திர மாநில முதல்வர் அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார்.
பள்ளிகள் திறப்பு :
கொரோனா தொற்றின் காரணமாக கடந்த மார்ச் முதல் ஆந்திராவில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு இருந்தது. தொற்றின் தீவிரம் குறையாமல் இருந்ததால் பள்ளிகளை திறக்காமல் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகு படிப்படியாக அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் பள்ளிகள் திறப்பிற்கு திட்டமிடப்பட்டது.
மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் 21ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்து கொள்ள அனுமதி அளித்து இருந்ததனை தொடர்ந்து ஆந்திராவில் 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சந்தேகங்களை தீர்த்து கொள்ள பள்ளிகள் திறக்கப்பட்டது.
நவம்பரில் பள்ளிகள் திறப்பு !
இந்நிலையில் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுடன் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஒரு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார். அதில் மாநிலத்தில் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் வரும் நவம்பர் மாதம் 02 ஆம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாம் என குறிப்பிட்டு உள்ளார்.
பள்ளிகள் திறப்பிற்கு பிந்தைய நடைமுறைகள் :
- பள்ளிகள் திறக்கப்பட்டாலும் 1,3,5,7 வகுப்புகளுக்கு ஒரு நாளும், 2,4,6,8 வகுப்புகளுக்கு ஒரு நாளும் வகுப்புகள் நடைபெறும்.
- 750க்கும் மேல் மாணவர்களின் எண்ணிக்கை இருந்தால் 3 நாட்களுக்கு ஒரு முறை வகுப்புகளை நடத்த வேண்டும்.
- பள்ளிகள் மதியம் வரை திறந்திருக்கும். மத்திய உணவு இடைவெளிக்கு பின் பள்ளிகள் இருக்கக் கூடாது.
- பிறகு நிலைமை சீராவதனை பொறுத்து மடுத்த கட்ட முடிவுகள் எடுக்கப்படும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்