ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் – அமைச்சர் திட்டவட்டம் !!!!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் முன் போலவே தொடர்ந்து நடைபெறும் என தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தற்போது திட்டவட்டமாக அறிவித்து உள்ளார்.
ஆன்லைன் வகுப்புகள் :
கொரோனா தொற்றின் காரணமாக தமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அடுத்த கல்வி ஆண்டுகள் தொடங்கி ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று கொண்டு உள்ளன.
ஆன்லைன் வகுப்புகள் தான் தற்போதுள்ள பிரதான கற்பித்தல் ஆயுதம் ஆகும். மாணவர்களில் பெரும்பாலானோர் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக தான் தங்களின் கல்வி கற்றாழை மேற்கொண்ண்டு வருகின்றனர்.
தொடர்ந்து நடைபெறும் !!
தமிழகத்தில் வரும் செப் 21 முதல் 5 நாட்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்படுவதாகவும் அதனால் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறாது எனவும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து இருந்தார். தற்போது அது காலாண்டு விடுமுறை மட்டுமே என்றும் அதன் பிறகு மீண்டும் வழக்கம் போல் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவித்து உள்ளார்.
மேலும் புதிய கல்வி கோலாகி குறித்து ஆராயப்படுவதாகவும், பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்