கடலூர் அரசு நியாய விலைக்கடை வேலைவாய்ப்பு 2020: 126 காலியிடங்கள்
கடலூரில் உள்ள அரசு நியாய விலைக்கடையில் காலியாக உள்ள நியாயவிலை கடை விற்பனையாளர் (Salesman) பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவிக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் 18.07.2020 பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் மூலம் இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் | தமிழ்நாடு அரசு ரேஷன் கடை, கடலூர் |
பணியின் பெயர் | நியாயவிலை கடை விற்பனையாளர் |
பணியிடங்கள் | 126 |
கடைசி தேதி | 18.07.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
காலிப்பணியிடங்கள்:
- நியாயவிலை கடை விற்பனையாளர் – 126
வயது வரம்பு:
01.01.2020 அன்று, விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி:
10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம்:
- நியாயவிலை கடை விற்பனையாளர் – Rs.4,300 to Rs.12,000
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவே பின்வரும் முகவரிக்கு 18.07.2020 அன்று மாலை 5.45 மணிக்கோ அல்லது அதற்கு முன்பாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.