தனியாளாக ஆற்றை சுத்தப்படுத்திய பிட்டு தபாஹிக்கு சர்வதேச அங்கீகாரம்!
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பிட்டு தபாஹி, மாசடைந்த ஆற்றை தனியாளாக சுத்தப்படுத்தியதன் மூலம் சர்வதேச கவனத்தை பெற்றுள்ளார்.
ஆற்றில் தேங்கியிருந்த பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை தொடர்ந்து அகற்றி, சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டார். தனது முயற்சியை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.
பிட்டுவின் சுற்றுச்சூழல் பணியை முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் பாராட்டினார். இதையடுத்து, நெதர்லாந்தைச் சேர்ந்த The Ocean Cleanup அமைப்பும் அவரது பணியை கவனித்து வேலைவாய்ப்பு வழங்க முன்வந்துள்ளது.
ஒரு தனிநபரின் தொடர் முயற்சியும் சுற்றுச்சூழலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு பிட்டு தபாஹியின் செயல்பாடு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.



























