கலாமை கொண்டாடுவோம் விண்வெளி அருங்காட்சியகம் முதல் டெல்லி இல்லம் வரை
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் மற்றும் ‘மிஸைல் மான்’ என அழைக்கப்படும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவை போற்றும் நிகழ்வுகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தில் அமைந்துள்ள கலாம் நினைவிடம் மற்றும் விண்வெளி அருங்காட்சியகத்தில் மாணவர்களும் விஞ்ஞான ஆர்வலர்களும் பெருமளவில் கலந்துகொண்டு அவரின் சாதனைகளை நினைவு கூர்ந்தனர். மேலும், கலாமின் வாழ்க்கை வரலாற்றை வெளிப்படுத்தும் சிறப்பு கண்காட்சி மக்கள் பார்வைக்கு திறந்துவைக்கப்பட்டது.
ஏ.ஐ., சகாப்தம் நோக்கிய மாறுதல் சி.ஐ.ஐ., சார்பில் 2 நாள் கருத்தரங்கு
டெல்லியிலுள்ள கலாம் இல்லத்திலும் (Dr. A.P.J. Abdul Kalam House) நினைவு தின நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. மாணவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர். அவரது சாதனைகள் இன்றைய இளைஞர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும், அறிவியல் துறையில் புதிய தலைமுறையை உருவாக்கும் நோக்கில் பல பள்ளிகளில் ‘கலாமின் கனவு இந்தியா 2020’ என்ற தலைப்பில் கருத்தரங்குகளும் நடத்தப்பட்டன.

























