தமிழகத்திற்கு கூடுதலாக ரூ 522.34 கோடி ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு…!! எதற்கு தெரியுமா…?
தமிழகத்தில் அவ்வப்போது இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்டு பெரும் நாசம் ஏற்படுகிறது. அந்த வகையில், கடந்த வருடம் டிசம்பர் மாதம் உருவான பெஞ்சல் புயலால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தது. இந்த பாதிப்பை சரிசெய்ய வெள்ள நிவாரண நிதியாக ரூ 2000 கோடியை விடுவிக்க தமிழக அரசு கோரியது. அதன் பின்,எவ்வளவு பணம் வழங்கவேண்டும் என்பது தொடர்பாக மத்திய அரசு குழு ஒன்று வந்து பாதிப்புகளை ஆய்வு செய்து , அதற்கான விரிவான அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. இந்நிலையில், இது தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
IPL 2025 CSK vs DC: இன்றுடன் விடைபெறுகிறார் தோனி.. இதுவே இறுதி போட்டி என தகவல்..!!
அதாவது, இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில், 2024 – ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான மாநில பேரிடர் நிதியை விடுவிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. அந்த வகையில், தமிழகத்திற்கு இயற்கை பேரிடர் பாதிப்புகளுக்காக கூடுதலாக ரூ. 522. 34 கோடியை ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது. மேலும், புதுச்சேரி மாநிலத்திற்கு ரூ 33 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

























