
தொடர்ந்து அதிகரிக்கும் தங்கத்தின் விலை..!! காரணம் என்ன..? பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்த அதிரடி தகவல்..
2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதல் இந்தியாவில் தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு அமெரிக்காவின் புதிய அதிபராக மீண்டும் பதவியேற்ற டிரம்ப் விதித்த வரி கட்டமைப்பு முக்கிய காரணமாக இருக்கக்கூடும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அதிகரித்து வரும் தங்கத்தின் விலை பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, கடந்த வியாழக்கிழமை (13-02-2025), அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் மற்ற நாடுகளுக்கு கடுமையான வரிகளை விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார். இந்த நடவடிக்கைகள் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை எதிர்த்துப் போராட உதவும் என்று வாதிட்டார். இதை தொடர்ந்து, அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்தது தங்கத்தின் விலை உயர்விற்கு காரணமாக அமைந்துள்ளது என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், மார்ச் மாத முடிவில் ஒரு சவரன் தங்கத்தின் விலை அதிகபட்சமாக ரூ. 70,000 யை தொட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

























