
சாம்பியன்ஸ் டிராபி 2025 அட்டவணை வெளியீடு.. ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் அணிகளின் மோதல் போட்டிகள்..
சாம்பியன்ஸ் டிராபி 2025 நடவிருக்கும் இந்தியா, பாகிஸ்தான் போட்டிகளை நடத்தும் முறையில் குழப்பம் ஏற்பட்ட நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) யின் சமரச பேச்சுவார்த்தைக்கு பின்னர் போட்டிகளை ஹைப்ரிட் மாடலில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஒப்புக் கொண்டது. இந்நிலையில் நீண்ட நாள் காத்திருப்பிற்கு பின் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ICC இன்று (24-12-2024) ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி 2025 க்கான போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது.
அதாவது சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியானது பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடைபெற உள்ளது. மேலும், போட்டியிடும் எட்டு அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு 15 போட்டிகள் விதம் பாகிஸ்தான் மற்றும் துபாய் முழுவதும் விளையாடப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து, இந்திய விளையாடும் அனைத்து போட்டிகளும் துபாயில் நடைபெற உள்ளது என்றும், துபாயில் நடக்கும் போட்டிகளில் இந்திய அணி தகுதி பெரும்பட்சத்தில் இறுதி போட்டியை லாகூரில் விளையாடும் என ICC தெரிவித்துள்ளது.

























