தமிழகத்தில் இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!

0
தமிழகத்தில் இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (நவம்பர் 10 ) முதல் அடுத்து வரும் 6 நாட்களுக்கு இடி மற்றும் மின்னல் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் காணப்படும். அதேபோல் இன்று (நவம்பர் 10) முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

JOIN WHATSAPP EXAMSDAILY TAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!