முதுகில் குத்திய துரோகி.. எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் பதிலடி.. பரபரப்பில் அரசியல் களம்!!
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று (அக்டோபர் 17) ‘அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள், நீக்கப்பட்டவர்களே மீண்டும் இணைக்க வாய்ப்பில்லை’ என்று தெரிவித்தார். இவரின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது இது தொடர்பாக முன்னாள் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஓர் முக்கிய கருத்தை கூறியுள்ளார்.
மோடி அரசில் வரி வசூல் மட்டுமே இவ்வளவா …!! ” வருமான வரித்துறை விளக்கம்”..!!
அதில், ‘மக்களவைத் தேர்தலில் 7 தொகுதிகளில் டெபாசிட் இழப்பு, 12 தொகுதிகளில் 3வது இடம், கன்னியாகுமரி, புதுச்சேரியில் 4வது இடம் என படுதோல்வியை சந்தித்துள்ளது அதிமுக’. ‘அனைவரின் முதுகில் குத்திய துரோகியை மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது’ என்று கூறி எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.


























