இந்தியாவில் ஆப்பிள் 16 சீரிஸ் மொபைல் உற்பத்தி அதிகரிப்பு..|| “காரணம் இதுதானா”..!!
எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களில் உலகளவில் முன்னணி நிறுவனமாக திகழும் ஆப்பிள் நிறுவனம், தற்போது புதிய ஐ-போன் 16 சீரிஸ் மொபைல்களை அதிக அளவில் இந்தியாவில் உற்பத்தி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கடந்த 2022ம் ஆண்டில் இந்தியாவில், ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல் உற்பத்திகள் 1.5 கோடி இருந்த நிலையில், கடந்த ஆண்டு மொபைல் உற்பத்தி 2.5 கோடியாக உயர்ந்தது. மேலும், சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் உள்ள அரசியல் உறவானது மிகவும் மோசமாக உள்ளதன் காரணமாக, ஆப்பிள் நிறுவனம் சீனாவில் ஐ-போன்களை உற்பத்தி செய்வதை குறைத்து வருகிறது. எனவே, இந்த காரணத்தினால் தான் இந்தியாவில் ஐ-போன்களின் உற்பத்திகள் அதிகரித்து உள்ளதாக சந்தை ஆராய்ச்சி நிறுவனம் “கேனலைசிஸ்” தெரிவித்துள்ளது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கிடு கிடுவென உயர்ந்த பூக்களின் விலை..! 1 கிலோ மல்லிகை எவ்வளவு தெரியுமா..?



























