Apple நிறுவனத்தின் பொருட்களை பயன்படுத்துபவர்களுக்கு CERT-In ஆனது எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது.
எச்சரிக்கை;
உலகம் முழுவதும் iPhone, iPad, Mac மற்றும் Apple Watch போன்ற Apple நிறுவனத்தின் பொருட்கள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. Apple நிறுவனத்தின் பொருட்களை வாங்குவது தற்போது பலரது கனவாக உள்ளது என்றால் அது மிகையாகாது. இந்நிலையில் Apple நிறுவனத்தின் சார்பில் இந்திய கணினி அவசர நிலை பதிலளிப்பு குழு எனப்படும் CERT-In ஆனது Apple பயனர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது.
TNPSC பயிற்சி மையத்தில் வேலைவாய்ப்பு – கைநிறைய சம்பளம்!!
அதில், “ஆப்பிள் தயாரிப்புகளில் பல பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. ஒரு ரிமோட் அட்டாக் செய்பவர் இந்த பாதிப்புகளில் சிலவற்றை பயன்படுத்தி சிறப்புரிமை, முக்கியமான தகவல் வெளிப்படுத்தல், பாதுகாப்பு கட்டுப்பாடு பைபாஸ் மற்றும் ரிமோட் குறியீடு செயல்படுத்தல் ஆகியவற்றை இலக்கு அமைப்பில் தூண்டலாம்” என CERT-In தெரிவித்துள்ளது. எனவே Apple பயனர்கள் Settings-ல் சென்று Software update செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.