பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் & ஸ்கூட்டர் – மாநில அரசு அறிவிப்பு!
அசாமில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்திற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதே போல மாணவர்களுக்கு ஸ்கூட்டர்களும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலவச சைக்கிள்:
அசாமில் கல்வியை மேம்படுத்தும் நோக்கிலும் மாணவர்களுக்கும் உதவும் வகையில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்க நேற்று நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ரூ.167.95 கோடி செலவில் சுமார் 3.78 லட்சம் மிதிவண்டி வழங்கப்படவுள்ளது. அதனை தொடர்ந்து மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு ஸ்கூட்டி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை (ஜூலை.07) எந்தெந்த பகுதியில் மின்தடை தெரியுமா? – விவரம் இதோ!
இதில் மேல்நிலை வகுப்பில் 75%க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு இலவசமாக ஸ்கூட்டர் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட திட்டங்கள் மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்கும், அவர்களின் திறன்களுக்கு வளர்ப்பதற்கு பெரும் ஊக்கமாக அமையும் என்று மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.