கணவரை பிரிந்த நிலையில் பிரபல சீரியல் நடிகைக்கு நடந்த வளைகாப்பு – வைரலாகும் புகைப்படங்கள்!
பிரபல சின்னத்திரை நடிகை ஒருவர் சில வாரங்களுக்கு முன்பு வரை பிரச்சனைகளை மட்டுமே பகிர்ந்து வந்த நிலையில், தற்போது தனக்கு வளைகாப்பை நடத்திக் கொண்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
வளைகாப்பு:
சின்னத்திரை சீரியல் நடிகை, நடிகர்கள் ஒன்றாக நடிக்கும் போது காதல் செய்து, அதில் ஒரு சிலர் வெற்றிகரமான தம்பதிகளாக திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் காதல் செய்யும் போது இருந்த அன்பு திருமணத்திற்கு பின்பு நீடிப்பதில்லை என்று கூறி பிரிந்து விடுகின்றனர். சமீபத்தில் சன் டிவி மகராசி சீரியல் புகழ் திவ்யா சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வந்தார்.
Follow our Instagram for more Latest Updates
இவருடன் நடித்த நடிகர் அர்னவ் வேறு பெண்ணுடன் பழகி வருவதாகவும், தன்னை கொடுமை படுத்துவதாகவும் கூறி கர்ப்பிணியாக இருந்த நிலையிலும் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது இவர் செவ்வந்தி சீரியலில் நடித்து வருகிறார். இவரது கணவர் அர்னவ் விஜய் டிவி செல்லமா சீரியலில் நடித்து வருகிறார். இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தற்போது இவர்கள் பிரிந்து வாழ்கின்றனர்.
சின்னத்திரையில் டாப் ஹீரோவிற்கு ஏற்பட்ட விபத்து – வெளியான புகைப்படம்! ரசிகர்கள் ஆறுதல்!
Exams Daily Mobile App Download
தற்போது திவ்யா 6 மாத கர்ப்பமாக இருக்கிறார். இவருக்கு சீரியல் நடிகர், நடிகைகள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சின்னதாக வளைகாப்பு விழா ஒன்றை நடத்தி உள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.