தமிழக அரசு பள்ளிகளில் 2,760 தற்காலிக ஆசிரியர்கள் – பணி நீட்டிப்பு வழங்கி உத்தரவு!
தமிழகத்தில் கடந்த 2019ம் வரையிலான கல்வி ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு புதிய ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது. சுமார் 2,760 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது இவர்களுக்கான பணி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பணி நீட்டிப்பு:
தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக நிலவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை ஆன்லைன் வாயிலாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு 2022 – 2023 ம் கல்வியாண்டில் கொரோனா தாக்கம் குறைந்ததால் பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது வகுப்புகள் நேரடியாக நடைபெற்று வருகிறது. அதனால் பள்ளிகளில் புதிதாக ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப் படவில்லை. அதன் பிறகு 2022 – 2023 ம் கல்வியாண்டில் கொரோனா தாக்கம் குறைந்து பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவியது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – கூட்டுறவுத்துறையின் புதிய திட்டம்!
இதனையடுத்து காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய அரசுக்கு கோரிக்கைகள் எழுந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு TET தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தற்போது தேர்வுக்கான விண்ணப்பபதிவுகள் முடிவடைந்துள்ள நிலையில் இந்த வாரம் தேர்வு தேதி மற்றும் அனுமதி சீட்டு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 2,760 தற்காலிக ஆசிரியர்களுக்கான பணி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 1990-91ம் ஆண்டு 2002-2003, 2006 – 2007ம் கல்வி ஆண்டுகளில் அரசு உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது.
Exams Daily Mobile App Download
அப்போது வணிகவியல், இயற்பியல் உள்ளிட்ட பாடங்களுக்கு 900 முதுகலை தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து 2014-2015, 2018 – 19ம் கல்வியாண்டில் 5 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக மாற்றப்பட்டு மொத்தம் 2,760 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கான பணி காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே 31.12.2021 வரை வழங்கப்பட்ட பணி காலம் முடிவடைந்த நிலையில் தற்போது 1.01.2022 முதல் 31.12.2022 வரை மேலும் ஒரு ஆண்டிற்கு தற்காலிக ஆசிரியர்களுக்கான பணி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதத்திற்கான ஊதியத்தை வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Hiii naa BAA muditan enku veli kutogaka