தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – கூட்டுறவுத்துறையின் புதிய திட்டம்!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் வாயிலாக மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை ரேஷன் கடைகள் மூலம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரேஷன் கடை:
தமிழகத்தில் ரேஷன் கார்டுகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் மலிவு விலையில் மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை பெற்று வருகின்றனர். கடந்த வருடத்தின் ஊரடங்கு மாதங்களில் மாநில அரசு ரேஷன் கடைகள் மூலம் நிவாரண பொருட்களை வழங்கியது. இதன் மூலம் ஏராளமான ஏழை எளிய மக்கள் பயனடைந்தனர். இந்த ரேஷன் கார்டு அனைத்து வேலைகளுக்கும் அவசியமாகிறது. மேலும் இருப்பிட சான்றாகவும் கருத்தில் கொள்ளப்படுகிறது. அதனால் பெரும்பாலான மக்கள் ரேஷன் கார்டு பெற முயற்சித்து வருகின்றனர்.
CBSE 10, 12 வகுப்பு மாணவர்களுக்கான 2023 பொதுத்தேர்வு – அட்டவணை வெளியீடு!
அத்துடன் திமுக தலைமையிலான அரசு ரேஷன் கடைகள் வாயிலாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளதால் ரேஷன் கார்டுக்கு பெற விண்ணப்பித்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ரேஷன் கடைகள் வாயிலாக 5 கிலோ கேஸ் சிலிண்டரை விற்பனை செய்ய கூட்டுறவுத் துறை முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய கூட்டுறவுத்துறை செயலர் அக்டோபர் 6ம் தேதி முதல் இத்திட்டம் அறிமுகப்படுத்தபடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
மேலும் தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் தமிழகத்தில் செயல்படுகிறது. அதனால் வெளிமாநில வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எந்த பகுதியில் வசிக்கிறார்களோ அங்கேயே ரேஷன் பொருட்களை வாங்கலாம் என்று தெரிவித்துள்ளார். அடுத்தாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பொருளாதார மையங்களாக செயல்படுத்த திட்டமிட பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக ரேஷன் கடைகள் வாயிலாக பல நலத்திட்டங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்