நகை அடமான கடையில் சந்தித்த கதிர், ஜீவா, மீனா அப்பாவிடம் பணம் கொடுக்க செல்லும் தனம் – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனா ஐஸ்வர்யாவும் மீனா அப்பா பேசியதை பற்றி மீண்டும் பேச அப்போது தனம் சண்டை போடாமல் இருங்க என சொல்கிறார். மறுபக்கம் கதிர் ஜீவா ஒரே கடைக்கு நகை அடகு வைக்க செல்கின்றனர். அப்போது ஜீவா கதிரை வீட்டிற்கு கூப்பிட ஆனால் கதிர் வரமாட்டேன் என சொல்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மீனா ஜீவா என் அப்பா கடைக்கு போக வேண்டும் அவரும் பாவம் தான என சொல்ல கண்ணன் அவர் தான் இந்த குடும்பத்திற்கு வில்லன் என சொல்கிறார். அப்போது மீனா ஏன் இப்படி எல்லாம் பேசுகிறாய் என கேட்கிறார். என் அப்பா தான் இந்த குடும்பத்திற்கு உதவி செய்கிறார் என சொல்ல உடனே ஐஸ்வர்யா பேசுவது எல்லாம் பேசிவிட்டு அப்பறம் உதவி செய்வதாக வந்து நிற்கிறார். ஆனால் நமக்கும் வெட்கம் இல்லாமல் அவருடன் பேசுகிறோம் என சொல்ல உடனே மீனா குடும்பம் என்றால் அப்படி தான் இருக்கும் என சொல்கிறார்.
TN Job “FB Group” Join Now
உன் சித்தி பேசியது சரியா என கேட்க அப்போது தனம் இருவரும் அமைதியாக இருங்க என சொல்கிறார். மூர்த்தி இதை எல்லாம் பார்த்துவிட்டு இனிமேல் நான் ரூமில் படுகிறேன் என சொல்கிறார். பின் கதிர் நகை அடமானம் வைக்கும் கடைக்கு செல்கிறார். அங்கே அவர் நகையை கொடுக்க அந்த நேரம் பார்த்து ஜீவா வருகிறார். ஜீவாவை பார்த்துவிட்டு நகைக்கடைக்காரர் உனக்கு தெரிந்தவரா என கேட்க என்னுடைய தம்பி தான் என சொல்கிறார். அப்போது கடைக்காரர் அதான் அவரை எங்கையோ பார்த்தது போல இருப்பதாக சொல்கிறார்.
பின் கதிர் நகைக்கு 1.5 லட்சம் கொடுக்க முடியும் என சொல்ல சரி என சொல்கிறார். பின் ஜீவா நகைக்கு 2.5 லட்சம் கொடுப்பதாக சொல்கிறார். பின் பணத்தை வாங்கி கொண்டு வெளியே வர கதிர் ஜீவாவிடம் வீட்டில் எல்லாரும் எப்படி இருக்காங்க என கேட்கிறார். எல்லாரும் நன்றாக இருப்பதாக ஜீவா சொல்ல உன்னுடைய முடிவை மாற்றிக் கொள் என கதிரின் கையை பிடிக்கிறார். ஆனால் கதிர் ஜீவா கையை எடுத்துவிட்டு கிளம்புகிறார். அதை பார்த்து ஜீவா அதிர்ச்சி அடைகிறார்.
மறுபக்கம் வீட்டில் அனைவரும் கண்ணனை கலாய்த்து கொண்டிருக்கின்றனர். அப்போது மீனா ஹார்ட்அட்டாக் என்பது பரம்பரை வியாதி அதனால் ஜீவாவை அடிக்கடி செக்கப் போக சொல்ல வேண்டும் என சொல்கிறார். ஜீவா கல்யாணம் செய்யும் போது ஒல்லியாக இருந்தான் இப்போது கொஞ்சம் கொழுப்பு வந்ததாக சொல்ல ஜீவா வந்ததும் கண்ணன் அதை சொல்லி மாறிவிடுகிறார். பின் தனத்திடம் ஜீவா பணத்தை கொடுக்க தனம் உடனே எடுத்துகொண்டு செல்வோம் என சொல்கிறார்.
கதிர் முல்லையும் வீட்டிற்கு என்ன பொருள்கள் வாங்க வேண்டும் என பேசிக் கொண்டு வர அப்போது ஜீவாவும் தனமும் வண்டியில் வந்து கொண்டிருக்கின்றனர். அப்போது ஜீவா மீனா அப்பாவிடம் பணத்தை கொடுப்பது நல்ல முடிவு தான் என சொல்ல ஆமாம் அவர் மருத்துவமனையில் பணம் கொடுத்ததாக சொன்ன போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது என சொல்கிறார். அப்போது முல்லை தனத்தை பார்த்துவிட்டு கூப்பிட முல்லை கழுத்தில் மஞ்சள் கயிறு இருப்பதை தனம் வருத்தத்துடன் பார்க்கிறார்.