தமிழகத்தில் புதிய பாதுகாப்பு அமைப்பு அறிமுகம் – அரசு உத்தரவு!
தமிழகத்தில் அணைகள் பாதுகாப்பு மசோதா கடந்த வருடம் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது அணைகளை பாதுகாக்கும் வகையில் மாநில அரசு அணை பாதுகாப்பு அமைப்பை உருவாக்கி உள்ளது.
அணை பாதுகாப்பு:
இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு அணை பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து, தற்போது மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அணைகளை ஒரே சீராக பாதுகாப்பது பற்றியது அணை பாதுகாப்பு மசோதாவாகும். இதில் சோதனை, செயல்முறை,பராமரிப்பு வழங்குதல் மற்றும் அவற்றின் பாதுகாப்பான செயல்பாட்டை உறுதி செய்வதற்கான நிறுவன திட்டமிடுதலை வழங்குதல் போன்றவைகள் இடம் பெற்றது. மேலும் அணை பாதுகாப்புக்கு பொறுப்பான மாநில அணை பாதுகாப்பு அமைப்பும் உருவாக்கப்படும் என்று மத்திய நீர் ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து அணைகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் துணைக் கட்டமைப்புகளின் வடிவமைப்பு, கட்டுமானம், பழுதுபார்ப்பு மற்றும் விரிவாக்கம் ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களை முறையான மதிப்பாய்வு போன்ற பணிகளை இந்த அமைப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் மாநில அணை பாதுகாப்பு அமைப்பானது, அணை பழுது போன்ற நிகழ்வுகளைப் புகார் அளிக்க வேண்டும். அணையின் முக்கிய நிகழ்வுகளை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் மத்திய அரசின் அணை பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மாநில அணை பாதுகாப்பு உருவாக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மார்பக கட்டியால் அவதிப்படும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஹேமா – அவரே வெளியிட்ட பதிவு!
அதன்படி நீர்வளத்துறையின் தலைமை பொறியாளர் தலைமையில் மாநில அணை பாதுகாப்பு அமைப்பு உருவாக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மண்டலங்களின் தலைமை பொறியாளர்கள் உட்பட அமைப்பின் உறுப்பினர்களாக 15 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அமைப்பு அணையில் ஆய்வு மேற்கொள்வது, பாதுகாப்பை உறுதி செய்வது, நீர் வருகை, வெளியேற்றத்தை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் என்று அரசு தெரிவித்துள்ளது.