பொதுத்துறை பணியாளர்களுக்கு அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை? அரசு விளக்கம்!
இலங்கை எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார சிக்கலை சமாளித்து வருகிறது. இந்நிலையில், இலங்கையில் நிலவி வரும் பொருளாதார சிக்கல்களை சமாளிப்பதற்காக அனைத்து சனிக்கிழமையும் பொதுத்துறை ஊழியர்களுக்கு விடுமுறை என அரசு அறிவித்துள்ளது.
பொதுத்துறை ஊழியர்களுக்கு விடுமுறை:
கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இலங்கை படு மோசமான அளவுக்கு பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு தான் மிகவும் மோசமான தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த பொருளாதார வீழ்ச்சியால் பெட்ரோல், டீசல், உணவு பொருட்கள் என அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் இரட்டிப்பு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எரிபொருள் இறக்குமதியும் மிகவும் பாதிப்படைந்துள்ளதால் கிட்டத்தட்ட 22 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பெட்ரோல் நிலையங்களில் மணிக்கணக்காக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், இலங்கையில் ஒரு கிலோ காய்கறிகளின் விலையே ஒரு சவரன் தங்க நகைகளின் விலை அளவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இலங்கை மக்கள் அன்றாடத் தேவைகளுக்கான பொருட்களை கூட வாங்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த உணவு பற்றாக்குறையை சமாளிப்பதற்காக ஒவ்வொருவரும் தங்களது வீட்டிற்கு பின்னால் உள்ள காலி இடங்களில் சிறிய அளவில் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் சுயமாகவே காய்கறி தோட்டத்தை உருவாக்குமாறு அரசு ஊக்குவித்து வருகிறது.
தமிழக நீதிமன்றத்தில் டிகிரி படித்தவர்க்கு வேலை அறிவிப்பு – தகுதி, அனுபவம் போன்ற தகவலுடன்..!
இதனால் பொதுத்துறை ஊழியர்கள் அனைவருக்கும் அனைத்து வெள்ளிக்கிழமையும் விடுமுறை என இலங்கை அரசு அறிவித்துள்ளது. அனைத்து வெள்ளிக்கிழமையும் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து வருவதால் எரிபொருள் கட்டுப்பாட்டையும் ஓரளவுக்கு சமாளிக்க முடியும் என அரசு இத்தகைய முடிவை எடுத்துள்ளது. இலங்கை அரசு மிகவும் மோசமான பொருளாதார சிக்கலை சந்தித்து வருவதால் அமெரிக்கா இலங்கைக்கு 47 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது. மேலும் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.