TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு தேதி குறித்த முக்கிய தகவல்!
கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறையின் கணக்கு அலுவலர் பதவிக்கான உத்தேச கால அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த நிலையில் இந்த மாத இறுதிக்குள் தேர்வு எப்போது என்பது குறித்தான அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் குரூப் 1, குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 முதலான தகுதி தேர்வினை நடத்தி தகுதியான தேர்வாளர்களை தேர்ந்தெடுத்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக தகுதித் தேர்வு எதுவும் நடத்தப்படாமலேயே இருந்தன. இந்தாண்டு கொரோனா பரவல் ஓரளவுக்கு குறைந்துள்ள நிலையில் கடந்த மே 21 ஆம் தேதி குரூப் 2 தேர்விற்கான முதன்மை தேர்வு நடைபெற்றது. 5,529 காலிப் பணியிடங்களுக்கு மொத்தமாக 9.94 லட்சம் பேர் மட்டுமே குரூப்-2 தேர்வை எழுதினர்.
TN Job “FB Group” Join Now
இதனையடுத்து குரூப் 4 தேர்வு வரும் ஜூலை 2 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. குரூப் – 4 தேர்வின் மூலமாக மொத்தமாக 7,382 காலிப் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. மேலும், இதில் 81 காலிப் பணியிடங்கள் ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலம் நிரப்பப்படவுள்ளன. இதனையடுத்து கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறையின் கணக்கு அலுவலர் பதவிக்கான தேர்வு குறித்து விண்ணப்பதாரர்கள் காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி.,யின் செயலர் உமா மகேஸ்வரி கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறையின் கணக்கு அலுவலர் பதவிக்கான தேர்வு குறித்தான அறிவிப்பு இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என அறிவித்துள்ளார்.
நேற்றுடன் 5வது நாளாக முழு ஊரடங்கு உத்தரவு அமல் – வன்முறை எதிரொலி!
மேலும், டி.என்.பி.எஸ்.சி சார்பில் நடத்தப்படும் கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறையின் கணக்கு அலுவலர் பதவிக்கான உத்தேச கால அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறையில் உள்ள கணக்கு அலுவலர் நிலை 3 பதவிக்கான தேர்வு குறித்தான அறிவிப்பு மட்டும் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.