TANUVAS பல்கலையில் ரூ.35000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்க கடைசி நாள்!
தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS பல்கலைக்கழகம்) சில நாட்களுக்கு முன் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. Senior Research Fellow பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. நாளை இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் (15.06.2022) என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
TANUVAS University வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் (TANUVAS) காலியாக உள்ள Senior Research Fellow பணிக்கு என 01 பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
- Senior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Chemistry, Biotechnology, Biochemistry பாடப்பிரிவில் Post Graduate Degree படித்தவராக இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
TN Job “FB Group” Join Now
- மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஆண்கள் எனில் 35 வயதிற்குள் உள்ளவராகவும், பெண்கள் எனில் 40 வயதிற்குள் உள்ளவராகவும் இருப்பது அவசியமானது ஆகும்.Senior Research Fellow பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் போது ரூ.31,000/- முதல் ரூ.35,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கான நேர்முகத் தேர்வானது 15.06.2022 அன்று காலை 10.00 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TANUVAS University விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அனைவரும் நாளை (15.06.2022) நடைபெற உள்ள நேர்காணலில் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.