நேற்றுடன் 5வது நாளாக முழு ஊரடங்கு உத்தரவு அமல் – வன்முறை எதிரொலி!
ஜம்முவின் பதேர்வா பகுதியில் வகுப்புவாத சம்பவங்கள் நடைபெற்றதை தொடர்ந்து அந்நகரில் நேற்றுடன் (ஜூன் 14) ஐந்தாவது நாளாக முழு ஊரடங்கு சட்டம் கடைப்பிடிக்கப்பட்டது. இது குறித்த கூடுதல் தகவல்களை இப்பதிவில் காணலாம்.
முழு ஊரடங்கு
சமீப காலமாக இந்தியாவில் போராட்டங்கள் தொடர்பான வன்முறைகள் பெருகிக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக, மதம் தொடர்பான கலவரங்கள் ஆங்காங்கே நடைபெற்று மக்களின் நிம்மதியை சீர்குலைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இஸ்லாமியர்களின் தூதராக சொல்லப்படும் நபிகள் நாயகத்தை பற்றி பாஜக நிர்வாகிகள் நுபூர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இப்போது மக்கள் மத்தியில் கலவரத்தை தூண்டி இருக்கிறது. இதனால் அசாம் உள்ளிட்ட சில பகுதிகளில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் வகுப்புவாத சம்பவங்கள் நடைபெற்றதை தொடர்ந்து ஜம்மு பிரிவின் பதேர்வா நகரில் அமல்படுத்தப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நேற்று (ஜூன் 13) ஐந்தாவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறைக்கு காரணமாக இருந்தவர்களில் சிலர் கைது செய்யப்பட்டாலும், சப்-டிவிஷன் நகரில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் கடந்த வாரம் வியாழன் அன்று விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் இப்போது பதேர்வா நகரத்தை தவிர மற்ற பகுதிகளில் நீக்கப்பட்டுள்ளது.
TNPSC கருவூலங்கள் & கணக்குகள் துறையில் வேலைவாய்ப்பு – ஜூன் மாதத்தில் அறிவிப்பு வெளியீடு!
அந்த வகையில் இப்போது மத நல்லிணக்கம் மற்றும் அமைதியைப் பேணுமாறும், சட்டம் ஒழுங்கு நிலைமையை மீறக்கூடிய எந்தவொரு செயலிலும் ஈடுபட வேண்டாம் என்று உள்ளூர் மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஊரடங்கு நீக்கப்பட்ட ஜம்முவின் தோடா, தாத்ரி மற்றும் காண்டோ பகுதிகளில் சந்தைகள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் கட்டுப்பாடுகளை நீக்கியதற்காக திருப்தி தெரிவித்துள்ளனர். இதனிடையே பதேர்வாவில் நிலைமை சாதாரணமாக இருந்தாலும் தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பதாக அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.